@@@பெயரற்ற தெருக்களின் அவலம் @@@

அன்பான நட்பென்னும் உறவைப்பார்க்க
அவசரமாக ஆவலோடு நான் வந்தேன்
அவள் வசிக்கும் தெருவினை நான்
அறிந்திருந்தும் வழியறியாமல்
அலைந்து திரிந்து நொந்துப்போனேன்

அடுத்த அடியில் அழகாக இருக்கும்
அந்த தெருதான் அது என்பதை நானறியேன்
அங்குமிங்கும் சுற்றி வந்தேன்
அமைதியாக எனக்கு எடுத்துச்சொல்ல
அவசர உலகில் எவரும் அனுமதிக்கவில்லை

அலுத்து வெறுத்து அமர்ந்த பின்பு
அத்தையென்று காதில்விழ எழமுடியாமல்
அழைத்த மகனை அன்பால் கொஞ்சவில்லை
அப்படி வெறுத்துப்போனது அலைச்சல்
அவன் அழைத்துசெல்ல வீடுகண்டேன்

அங்கு தோழியிடம் சொல்லிமுடிக்க ஓடிவந்த
அக்குழந்தை காகிதத்தில் பேனாக்கொண்டு
அழகாக எழுதி பசையொன்றை கையிலெடுத்து
அத்தெருஓரம் சென்று ஒட்டியபின்பு படித்தேன்
அதிர்ந்துபோனேன் அலுத்து சிரித்துக்கொண்டேன்
அத்தெருப்பெயர் வழிக்காட்டித்தெரு ...

கவியாழினி...

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (11-Jan-13, 5:54 pm)
பார்வை : 169

மேலே