தென்னம் புள்ள
உன்னையும் நான் வளர்த்தேன் -ஒரு
தென்னையும் நான் வளர்த்தேன்
கண்ணின் இமைபோல
கருக்கலேன்றும் பகலென்றும் பாராது
நான் வளர்த்தேன்
பாவி மக நான்
பச்சை தண்ணிகூட மறந்தேன்
பருவம் வந்து பளபளப்பு ஆனவுடன்
ஊரார் கண் படாம
ஒரு தூசும் மேல படாம
நான் பார்த்தேன்
இறக்கை முளைத்த குருவி போல
ஏன் படபடத்து வாரே
தோள் மீதும் மார் மீதும் தூக்கி
வளர்த்த அம்மா பேச்சை
தூக்கி போட்டு போரே
எவளையோ ஒருத்திய
எங்கிருந்தோ கூட்டிவந்து
இவதான் என் பெண்டாட்டி
இவ சொல்லுறதை கேட்கனுமாம்
போடா போடா போக்கத்த பயலே
நீ தண்ணி ஊற்றுவ என்று
கால ஊன்றி நிக்கலே
என்னை காப்பற்றுமடா
நான் வளர்த்த தென்னம் புள்ள !!!!!