பகலை தேடும் நிலா

காமனின் கையில்
சிக்கி விட்ட அம்புகள் நாங்கள். .

உணர்வென்ற நோய் வந்து
ஆட்டுவிக்கையில்
அடக்குகின்ற அங்குசம் நாங்கள் . .

இறை தேடும் ஓநாய்கள் மேல்
என்போம் இந்த தசை தின்னும்
நாய்களுக்கு . . .

வேட்டையாடி உண்டு விட்டு
எச்சில் என்று ஒதுக்கும் போதுதான்
அழுகிறது மனதோடு உடலும் . .

வெறியோடு வந்தவன்
வெறியடங்கி விட்டான் - ஆனால்
விழித்து கொண்ட பெண்மையை
என்ன செய்ய ?

காம பசி போக்கும் நாங்கள்
இன்று காலனின் பிடிக்குள் . .

விரும்பி ஏற்றதல்ல இது
என்றாலும் - வெளிவர
கூசுகிறது வேசி என்பதால் . .

தயங்காமல் வந்து விடுவோம்
தாங்கி கொள்ள யார் வருவார் ?

அன்னையின் மடியில்
ஆயிரம் கதை கேட்டு
அழகாய் நிலாச் சோறு
உண்டவர் தாம் நாங்களும் . . .

எங்களின் அனுபவங்களை
சேர்த்து குழந்தைக்கு
பாலுட்ட முடியாத பாவிகள் நாங்கள் . .

வேசியின் மகளென்று முத்திரை
குத்தி வேட்டையாடி விடுவார்கள்
என்று நாங்களே அநாதை முத்திரை
குத்தி அரசு தொட்டிலில் விட்டு
அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம் . .

விலை மாது என்று விலை போனபின்
வந்த வழியிலும் போக முடியாமல்
வேறு வழியும் இல்லாமல்
முடங்கி விட்ட காகித பூக்கள் நாங்கள் . .

இரவில் இயங்கும் நாங்கள்
இயந்திர நிலாக்கள் - ஆம்
இயந்திரங்கள் தான்
காலவரையின்றி,
கடுகளவேனும்,
உணர்ச்சிகளும் இன்றி . ..

இரவை வெறுத்து பகலை தேடும்
பகல் நிலாக்கள் நாங்கள்

எழுதியவர் : honey (23-Jan-13, 12:00 pm)
பார்வை : 83

மேலே