!!!===(((மாவீரனே உம்மை வணங்குகிறேன்)))===!!!

வீரத்தின் விளைநிலமாய்
- - - வங்கத்தில் உதித்தவனே
சிங்கத்தின் கர்ஜனையால்
- - - வெள்ளையரை குலைத்தவனே
நின்புகழ் பாடிடவே
நெஞ்சம் ஏங்குதடா....

புரட்சியின் அடித்தளமாய்
- - - பூமியிலே முளைத்தவனே
எழுச்சியின் வித்தகனாய்
- - - எழுந்துவந்த ஆதவனே
நின்புகழ் பாடிடவே
நெஞ்சம் துடிக்குதடா...

தேசத்தை மீட்டிடவே
- - - படைத்தளம் உருவாக்கி
அந்நியரை விரட்டிடவே
- - - போர்க்களம் புகுந்தவனே
நின்புகழ் பாடிடவே
நெஞ்சம் அலையுதடா...

ஒன்பதாவதாய் பிறந்தவனே
உலகம்போற்ற வாழ்ந்தவனே...
விடுதலையே உயிராக
பூமியிலே விதைத்தவனே...
உன்னை வணங்குகிறேன்
உன்வழியில் வாழுகிறேன்...

வஞ்சகரை ஒழித்திடவே
தாயகத்தை காத்திடவே
நெஞ்சில் உனைவைத்து
களத்தில் நிற்கின்றேன்
கனவுகளை விதைக்கின்றேன்...!!!


----------- நிலாசூரியன் -------------

குறிப்பு;
======
இன்று பிறந்தநாள் காணும் நேதாஜிக்கு சமர்ப்பணம்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (23-Jan-13, 12:31 pm)
பார்வை : 135

சிறந்த கவிதைகள்

மேலே