மறைந்த ஒன்றைத் தேடி...

கண்ணின் கடைசி தூரப்பார்வை
வரை உன்னை தேடி அலைகிறேன்
செவியின் எல்லை ஒலி வரை
உன் ஓசை கேட்கிறதா என
நுட்பமாக கவனிக்கிறேன்
காடு,கடல்,மலைத் தாண்டி
கால்கள் உன் அடையாளம் காண
தொடர்ப் பயணம் செய்கிறது
வான் தாண்டி மேலே பறந்தாலும்
மண்ணை கீழ் நோக்கி பறித்தாலும்
உன் வாசம் வீசாதா என
நாசி நுகர்ந்து பார்க்கிறேன்
தென்படவில்லை உன் அடிச்சுவடு
ஒருமுறை உன்னை பார்க்கமுடியாதா
தவிப்பில் ஆயிரம் விம்மல்களுடன்
கண்ணீர் தாளை நனைக்கிறது
ஏக்கம் கலந்த உன் நினைவுகளுடன்....

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (5-Feb-13, 12:14 am)
பார்வை : 179

மேலே