ஆயிஷா பாரூக் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஆயிஷா பாரூக்
இடம்:  Pudukkottai
பிறந்த தேதி :  17-Jan-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2012
பார்த்தவர்கள்:  1712
புள்ளி:  644

என்னைப் பற்றி...

பாமரனும் புரியும் வகையில் மொழி இருக்க வேண்டும் என்பது என் நோக்கம், என் படைப்புகளும் அவ்வாறே இருக்கும். என்னுடைய படைப்புக்களை படிக்கும் அணைத்து தோழர் தோழியர் அனைவருக்கும் மனதார நன்றி.

என் படைப்புகள்
ஆயிஷா பாரூக் செய்திகள்
அஹமது அலி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-May-2014 9:12 am

இருள் கவியும்
இளமாலை நேரங்களில்
=
ஒளிச்செறியும்
அதிகாலை நேரங்களில்
=
கிட்டப் பார்வைக்கு
எட்டிடும் தொட்டிப் பூக்கள்
=
எட்டப் பார்வைக்கு
கிட்டிடும் தென்னை மரங்கள்
=
தென்னங் குரும்பை
கொறிக்கும் அணில்கள்
=
மகிழம்பூ மரத்தில்
மகிழ்ந்திருக்கும் தேன்சிட்டுகள்
=
மாடத்தில் கூடுகட்டி
குடியேறும் சிட்டுக் குருவிகள்
=
மின் மரத்தில் பூத்திருக்கும்
கரும் காகப் பூக்கள்
=
சாளரம் வழி எப்போதும்
ஊடுருவும் ஈக்கள்
=
மசூதி மினராக்களில்
படபடக்கும் மாடப்புறாக்கள்
=
பக்கத்து வீட்டு பாப்பாவின்
பூனை அழுகுரல்
=
தெருவிலோடும் சிறுவர்களின்
விளையாட்டு ரயில்
=
எங்கிருந்தோ வந்து
மேனி போர்த்த

மேலும்

அழகு அருமை :) 28-Jun-2014 5:11 pm
அசத்தலான கவிதை கவிஞரே. உங்கள் கவிதைகள் நல்ல நல்ல கருத்துக்களை சொல்கிறது. 19-Jun-2014 6:21 pm
ரசிக்க வைத்தது சாளர சிறகுகள் அருமை 15-Jun-2014 6:52 am
அருமை நட்பே 13-Jun-2014 1:59 pm
ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) umarsheriff மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2014 11:16 am

வாழ்கையின் எல்லைகள் விரிகிறது
நிஜத்தில் இல்லாத ஒன்றை
நிழலின் பின்னே காண்பதில் சுகம்
எதிர்பாத்திராத தருணங்கள் மோதும் போது
கற்பனை உலகம் களைகின்றன
பொழுதினில் கனவுகள் மறைகின்றன
அவரவர் வாழ்க்கை வாழ்வதை விட
அடுத்தவர் வாழ்கையை தீர்மானிக்கும்
மனிதர்கள் பெரும்பாலும் அடுத்தவரை
நிம்மதியாக வாழவிடுவதில்லை
சுழலில் சிக்கிய படகை போல
இவர்களிடம் சிக்கும் பலர் மீள்வதில்லை
மீளும் சிலர் அடுத்த சுழலில் சிக்குகின்றனர்
பந்தம்,பாசம்,உறவு போன்ற பல அடையாள
சின்னங்களாய் நம்மை சூழ்ந்த சுழல்கள்
நம் வாழ்வின் பயணத்தை மாற்றுகின்றன

மேலும்

சுழற்றியடிக்கும் சுழல்!!!நன்று தோழியே! 11-Jun-2014 11:28 am
நன்றி... 02-Jun-2014 2:40 pm
நன்றி தோழரே.... நலம்... நீங்க எப்படி இருக்கிங்க... 02-Jun-2014 2:40 pm
நன்றி... 02-Jun-2014 2:39 pm
ஆயிஷா பாரூக் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 11:16 am

வாழ்கையின் எல்லைகள் விரிகிறது
நிஜத்தில் இல்லாத ஒன்றை
நிழலின் பின்னே காண்பதில் சுகம்
எதிர்பாத்திராத தருணங்கள் மோதும் போது
கற்பனை உலகம் களைகின்றன
பொழுதினில் கனவுகள் மறைகின்றன
அவரவர் வாழ்க்கை வாழ்வதை விட
அடுத்தவர் வாழ்கையை தீர்மானிக்கும்
மனிதர்கள் பெரும்பாலும் அடுத்தவரை
நிம்மதியாக வாழவிடுவதில்லை
சுழலில் சிக்கிய படகை போல
இவர்களிடம் சிக்கும் பலர் மீள்வதில்லை
மீளும் சிலர் அடுத்த சுழலில் சிக்குகின்றனர்
பந்தம்,பாசம்,உறவு போன்ற பல அடையாள
சின்னங்களாய் நம்மை சூழ்ந்த சுழல்கள்
நம் வாழ்வின் பயணத்தை மாற்றுகின்றன

மேலும்

சுழற்றியடிக்கும் சுழல்!!!நன்று தோழியே! 11-Jun-2014 11:28 am
நன்றி... 02-Jun-2014 2:40 pm
நன்றி தோழரே.... நலம்... நீங்க எப்படி இருக்கிங்க... 02-Jun-2014 2:40 pm
நன்றி... 02-Jun-2014 2:39 pm
ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) kkannan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-May-2014 2:13 pm

ஒரு புள்ளியில் ஆரம்பித்தவை
மறுபுள்ளியில் முடிகிறது
எதற்கு ஆரம்பித்தோம்
எதற்கு முடித்தோம்
இடைப்பட்ட நிலையிலே வாழ்க்கை
வெறுமை சூழ்ந்த மேகங்கள்
காட்சியுள்ளவரை தெரிகிறது
நிசப்பதமான தருணத்தில்
நீட்சிகள் மறைந்துபோகிறது
துடிக்கும் வரை இதயமும்
சுவாசம் வரை உயிரும்
உன்னை விட்டு விலக
நினைத்தது இல்லை
நினைப்பவை நடப்பதுமில்லை
என் வாழ்நிலை மாறாதோ
கண்ட கனவுகள் நிஜமாகாதோ...

மேலும்

எதற்கு ஆரம்பித்தோம் எதற்கு முடித்தோம் வரிகள் சிந்திக்க வைக்கிறது. 31-Dec-2014 5:13 pm
உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழி 03-May-2014 4:31 pm
நன்றி... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் 03-May-2014 4:31 pm
கலை... நன்றி... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் 03-May-2014 4:30 pm
ஆயிஷா பாரூக் - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2012 1:09 pm

மனதில் மின்னலாக
கண்ணிமைப்பொழுதில்
சூடான மேனியாய்
பரவசச் சிலிர்ப்புடன்
மயங்கியப் பார்வையாய்
வார்த்தையை விழுங்கி
துடித்த செவ்விதல்கள்
கைமெலியாமல் நழுவிய
கண்ணாடி வளையல்கள்
காலசைக்காமல் பேசிய
வெள்ளி கொலுசொலிகள்
குளிர்வாடை வீசாமல்
நெளிந்த கொடியான இடுப்பில்
பட்டாடைகள் பாரமாகி கட்டவிழ

இருமனம் ஓருடலாய்
சேரத்துடித்தப் அப்பொழுதில்
இதயம் கனிந்துருகி
என்னவன் தொட்டப்பொழுதிலே
ஆயிரமாயிரம் உணர்வலைகள்
உடலெங்கும் இசையமைக்க
நீங்கினால் சுட்டுவிட
அணுகினால் குளிர்ந்துவிட
எறிந்த தீபத்தை அமிழ்த்திவிட்டு
என்னவனின் தீபமாய் ஒளிர்ந்தேன்
காலைக்கதிரவன் புலரும்வரையில்

வண்ணக்கோலமிட

மேலும்

அருமையான வரிகள் 12-Jan-2016 1:24 pm
யாவும் அறிந்த தோழி அழகான கவிதை முடிவு....... 06-May-2015 8:10 pm
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 12-Mar-2014 5:24 pm
தெளிவுரை தேவைப்படாத அக நானூற்றுப் பாடல் படித்த இனிமை. 06-Mar-2014 11:51 am
L Swaminathan அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-May-2014 2:01 pm

மொழியைத் தந்தையாய்
உணர்வைத் தாயாய்
கொண்டு பிறப்பது கவிதை.

கர்ப்பந் தரித்திட
கட்டாயம் தேவை
மொழியும் உணர்வும்
இரண்டறக் கலத்தல்.

அக்கலவியின் விளைவாய்
மனமெனும் பையுள்
சூல்கொண்டிடும்
கவிதைக் குழந்தை.

உண்மைப் பொருளை
உதிரமாக்கி
உணர்வுத்தாய் தர
உருவம் அடையும்.

மொழித்திறம் புகுத்திய
வார்த்தைகள் உண்டு
உருவளர்ச்சி காணும்.

புத்தியின் கூர்மையும்
இதயத்தின் ஈரமும்
கூடவே சேர்ந்தால்
கூடுதல் வளர்ச்சி.

கற்பனை மருந்து
அதிகம் உண்டால்
அறைகுறை வளர்ச்சி
அடைந்திடக்கூடும்.

பொய்யும் சேர
உடல்நலம் சோரும்.
பிரசவம் பிரச்சினையாகும்.
மேலும்,
அற்பகாலமே வாழும்.

கருப்பொருள் உண்மை

மேலும்

மிக்க நன்றி. 09-May-2014 11:47 am
அருமையான படைப்பு...!! 06-May-2014 1:33 am
மிக்க நன்றி. 02-May-2014 4:16 pm
அருமை ! 02-May-2014 7:52 am
ஆயிஷா பாரூக் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2014 2:13 pm

ஒரு புள்ளியில் ஆரம்பித்தவை
மறுபுள்ளியில் முடிகிறது
எதற்கு ஆரம்பித்தோம்
எதற்கு முடித்தோம்
இடைப்பட்ட நிலையிலே வாழ்க்கை
வெறுமை சூழ்ந்த மேகங்கள்
காட்சியுள்ளவரை தெரிகிறது
நிசப்பதமான தருணத்தில்
நீட்சிகள் மறைந்துபோகிறது
துடிக்கும் வரை இதயமும்
சுவாசம் வரை உயிரும்
உன்னை விட்டு விலக
நினைத்தது இல்லை
நினைப்பவை நடப்பதுமில்லை
என் வாழ்நிலை மாறாதோ
கண்ட கனவுகள் நிஜமாகாதோ...

மேலும்

எதற்கு ஆரம்பித்தோம் எதற்கு முடித்தோம் வரிகள் சிந்திக்க வைக்கிறது. 31-Dec-2014 5:13 pm
உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழி 03-May-2014 4:31 pm
நன்றி... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் 03-May-2014 4:31 pm
கலை... நன்றி... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் 03-May-2014 4:30 pm
ஆயிஷா பாரூக் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 12:42 pm

கண்கள் இருந்தும் குருடாய்
காதுகள் இருந்தும் செவிடாய்
வாய் இருந்தும் ஊமையாய்
கால்கள் இருந்தும் தவறாய் பயணித்து
குறை கூறும் மனதுடன்
நிறைந்த நம் சமூகத்தில்
மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !

தீயதை பார்த்திடாமல்
புரணியை பேசிடாமல்
பொய்யை கேட்டிடாமல்
தவறான வழி நடந்திடாமல்
வஞ்சகம் கொண்டு மனமாக இல்லாது
வாழும் மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !
இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்

ஆயிஷாபாரூக்

மேலும்

நல்ல படைப்பு தோழரே 26-Dec-2013 10:06 pm
உண்மை................... 26-Dec-2013 7:05 pm
உணமைதான் தோழமையே 26-Dec-2013 7:03 pm
நன்று! 03-Dec-2013 7:04 pm
ஆயிஷா பாரூக் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 12:47 pm

என்னை தேடும் வெள்ளி நிலவே
உன்னை தவழும் தென்றல் நானே
அன்னை மடிசாய ஏக்கமாகி தவிக்கிறாய்
தாலாட்டை கேட்டு கண்ணுறங்க பார்க்கிறாய்
குயிலூசையாக ஜன்னல் வழியே பாடுகிறேன்
அதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ...

காலம் விதித்த கோலமடி செல்லக்கிளியே
காலனின் பிடியில் அன்னையடி பிள்ளையமுதே
உன்னை பிரிந்து நித்தம் துடிகின்றேன்
காற்றிலே சுவாசமாகி உன்னுடன் கலந்துருப்பேன்
கலங்காதே வருந்தாதே நிழலாய் தொடர்ந்துருப்பேன்
இதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ....

நிஜங்களை ஏற்றுவிட்டால் வலியும் மறைந்துவிடும்
மாயங்களை விலக்கிவிட்டால் உண்மைகள் புரிந்துவிடும்
ஆசிர்வதித்து ஆசைகள் யாவும் தீர்த்துக்வைப்பேன்

மேலும்

தோழமையின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி... :-) 24-Nov-2013 4:31 pm
தோழமையின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி... :-) 24-Nov-2013 4:31 pm
தோழமையின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி... :-) 24-Nov-2013 4:31 pm
தோழமையின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி... :-) 24-Nov-2013 4:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே