L Swaminathan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : L Swaminathan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-May-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 145 |
நான் மின்னணுவியல் பயின்ற, தமிழ் நேசன். கவிதைகள் படிப்பதிலும், எழதுவதிலும் மிக்க ஆர்வம் உள்ளவன். கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபாடுள்ளவன்.
நரரின் வாழ்வும்
நதியும் ஒன்றே.
தேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.
மேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.
சினைவழி
தோன்றுவதொன்று.
சுனைவழி தோன்றுது
மற்றொன்று.
கர்ப்பந்தரித்தே
இரண்டும் பிறக்குது.
பற்பல வழிகளில்
பயணம் செய்யுது.
இரண்டின் வழியிலும்
இருக்குது பாரீர்
மேடு பள்ளங்கள்
ஊடே வீழ்ச்சிகள்.
இரண்டையும் போற்றிப்
பேணுதல் அவசியம்.
தவறிடின் தரிசாய்
போவது சாத்தியம்.
அறிவும் ஒழுக்கமும்
கரையாய்க் கொண்டு
அளவாய் ஓடணும்
மனித நதி.
எக்கரை மீறினும்
துக்கம் நிச்சயம்.
அழிவும் பழியும்
அடைவது சத்தியம்.
கரையடங்கி
இரண்டும் போக
காலமுழுதும்
காணும் வளமே.
நீர்நதியதனால்
செழிக்குது
நரரின் வாழ்வும்
நதியும் ஒன்றே.
தேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.
மேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.
சினைவழி
தோன்றுவதொன்று.
சுனைவழி தோன்றுது
மற்றொன்று.
கர்ப்பந்தரித்தே
இரண்டும் பிறக்குது.
பற்பல வழிகளில்
பயணம் செய்யுது.
இரண்டின் வழியிலும்
இருக்குது பாரீர்
மேடு பள்ளங்கள்
ஊடே வீழ்ச்சிகள்.
இரண்டையும் போற்றிப்
பேணுதல் அவசியம்.
தவறிடின் தரிசாய்
போவது சாத்தியம்.
அறிவும் ஒழுக்கமும்
கரையாய்க் கொண்டு
அளவாய் ஓடணும்
மனித நதி.
எக்கரை மீறினும்
துக்கம் நிச்சயம்.
அழிவும் பழியும்
அடைவது சத்தியம்.
கரையடங்கி
இரண்டும் போக
காலமுழுதும்
காணும் வளமே.
நீர்நதியதனால்
செழிக்குது
குருவின் திருவில்
நிறைவது தெய்வம்.
குருவின் அண்மை
தருவது அமைதி.
எண்ணந்துறந்த
நிர்மல மனமும்
தன்வயம் மறந்து
தானே கரையும்.
அடங்கிய மனதில்
தொடங்கிடும் பூஜை
காலமும் ஞாலமும்
தொலைந்த நிலையில்.
நெக்குயிர் நிலையில்
நிறையும் நிம்மதி.
மௌனம் மந்திரம்.
விழிநீர்த் துளிகள்
அர்ச்சனை மலர்கள்.
நன்றியுணர்வே
நல்மணியோசை
பொன்னொளி வீசும்
தீபமும் தூபமும்.
நன்றிப்பெருக்கில்
நனையும் இதயம்
அன்பில் கலந்து
அருமை நைவேத்தியம்.
பக்தியின் உச்சம்
பூரண சமர்ப்பணம்.
எதுவும் வேண்டா
நிறைவே பிரஸாதம்.
ஆத்ம பூஜையில்
அமர்க்களமில்லை.
பகட்டுப் பக்தி
சடங்கெதுமில்லை.
நிகழ்ந்ததிதெல்லாம்
நிற
இயற்கை இனியது..
எண்ணிலடங்கா உயிர்கள்
எத்தனையெத்தனை வகைகள்
அத்தனையும் தோற்றுவித்து
அழகாய்க் காக்கிறது.
நீலவான்..
நிமிடத்தில் உருமாறும்
வெண்பஞ்சு மேகங்கள்
வண்ணவண்ணமாய்
விண்பரவும் கதிரொளி
தண்ணொளிச் சிந்தி
வளர்ந்தும் தேய்ந்தும்
விளையாடும் சந்திரன்
பூக்கூட்டமாய்
புன்னகைக்கும் தாரகைகள்
கருத்துப் பெருத்துக்
கர்ச்சிக்கும் கருமேகம்
வெட்டும் கொடிமின்னல்
விட்டுவிட்டு விண்ணதிர
தட்டும் இடியோசை
சுழித்தோடும் நதி
சுற்றித் தலையசைக்கும் வயல்
செழித்தோங்கும் தோப்பு
செருக்கில்லாவமைதியில்
செறிந்துறையும் மலைகள்..
அழகில்லாவெதுவும்
இயற்கை தரவில்லை
அருமையாய்ப் பேண
நமக்குத் தெரிய
இயற்கை இனியது..
எண்ணிலடங்கா உயிர்கள்
எத்தனையெத்தனை வகைகள்
அத்தனையும் தோற்றுவித்து
அழகாய்க் காக்கிறது.
நீலவான்..
நிமிடத்தில் உருமாறும்
வெண்பஞ்சு மேகங்கள்
வண்ணவண்ணமாய்
விண்பரவும் கதிரொளி
தண்ணொளிச் சிந்தி
வளர்ந்தும் தேய்ந்தும்
விளையாடும் சந்திரன்
பூக்கூட்டமாய்
புன்னகைக்கும் தாரகைகள்
கருத்துப் பெருத்துக்
கர்ச்சிக்கும் கருமேகம்
வெட்டும் கொடிமின்னல்
விட்டுவிட்டு விண்ணதிர
தட்டும் இடியோசை
சுழித்தோடும் நதி
சுற்றித் தலையசைக்கும் வயல்
செழித்தோங்கும் தோப்பு
செருக்கில்லாவமைதியில்
செறிந்துறையும் மலைகள்..
அழகில்லாவெதுவும்
இயற்கை தரவில்லை
அருமையாய்ப் பேண
நமக்குத் தெரிய
உழன்று திரியும் மனதை
உள்ளுக்குள் கட்டுவதே
உண்மையில் தவமென்று
உணர்ந்து உரைக்கின்றேன்.
ஐம்புலன் வழியாக
அலைக்கழியும் அகத்தினையே
அமைதியாய் இருத்தி - தன்னுள்
அடங்கி மூழ்கவைக்க
அருமையாய்க் கைக்கூடும்
அளவிலா ஆனந்தம்.
உயிர்த்தல் நோக்கமிதை
உணர்ந்தே உரைக்கின்றேன்.
முதுகு நேராக்கி
முனைப்போடுடல்
தளர்ந்தமர்ந்து
கண்மூடி
மூச்சின்கண்
மனம் செலுத்த
மூக்கின்கீழ்
மனங்குவிக்க
உள்ளுக்குள் பயணம்
உடன் தொடங்கும் காணீர்.
இலகுவில் குவியாது
எளிதில் அடங்காது
மனம் திமிறும்
மாகடலாய் குமுறும்
எக்குத்தப்பாய்
எண்ணம் தோன்றும்.
ஏகமாய் இரைச்சலிடும்
எழுந்து நகரச்சொல்லும்.
சுற்றியெழ
பற்று(ம்) அழுக்ககற்றி
நற்றுணர்வில் நீராடி
(அ)கந்தை ஆடை தள்ளி
அன்பெனும் புத்தாடை சூடி
நல்லெண்ண விளக்குகளால்
உள்ளெங்கும் ஒளியேற்றி
உலகும் உள்ளுயிர்யாவும்
உவப்புமிக வாழ்த்தி
நலமெனும் ருசிமிகு
நற்சொற் பலகாரம்
தானுண்டு மற்றோர்க்கும்
தாராளமாய்த் தந்து
சிரிப்பு மத்தாப்பு
சீர்வாழ்த்து சரவெடிகள்
குறையா அன்பொளி
நிறைவாய்ச் சிந்துவாணம்
ஆசையுடன் கொளுத்தி
அனைவரின் அகமலர
நேசக்கரங் குலுக்கி
நிறைவாய்க் கொண்டாடிடுவோம்.
வறியோருடன் பகிர்ந்து
செறிவுற மகிழ்வோம்.
புரிதல் மிகவாகின்
பூரிக்கும் மனிதம் தானே.
உழன்று திரியும் மனதை
உள்ளுக்குள் கட்டுவதே
உண்மையில் தவமென்று
உணர்ந்து உரைக்கின்றேன்.
ஐம்புலன் வழியாக
அலைக்கழியும் அகத்தினையே
அமைதியாய் இருத்தி - தன்னுள்
அடங்கி மூழ்கவைக்க
அருமையாய்க் கைக்கூடும்
அளவிலா ஆனந்தம்.
உயிர்த்தல் நோக்கமிதை
உணர்ந்தே உரைக்கின்றேன்.
முதுகு நேராக்கி
முனைப்போடுடல்
தளர்ந்தமர்ந்து
கண்மூடி
மூச்சின்கண்
மனம் செலுத்த
மூக்கின்கீழ்
மனங்குவிக்க
உள்ளுக்குள் பயணம்
உடன் தொடங்கும் காணீர்.
இலகுவில் குவியாது
எளிதில் அடங்காது
மனம் திமிறும்
மாகடலாய் குமுறும்
எக்குத்தப்பாய்
எண்ணம் தோன்றும்.
ஏகமாய் இரைச்சலிடும்
எழுந்து நகரச்சொல்லும்.
சுற்றியெழ
கதிரவனும்
கடற்பெண்ணும்
கலந்து பெற்ற
மேகமகள்
பருவங்கண்டு
காற்றழகன்
களிப்புறவில்
சூல்கொள்ள
காலத்தே
பிறப்பது
மழையென்னும்
மகவு.
மேகத்தாய்
மடியிறங்கி
துளித்துளியாய்
பூமிவரும்
மழைக்குழந்தை
குணமறிய
கூறுகிறேன்
இக்கவிதை.
சிணுங்கல்
சிறுதூறல்.
சிரிப்பே
கொடிமின்னல்.
சிறுமொழிவே
இடியோசை.
அழுகை
தொடர்மழையாம்.
பிடிவாதம்
பெருமழையாம்.
ஆங்கார வெளிப்பாடோ
பேய்மழை பெருவெள்ளம்.
அவள்
ஒளிந்து விளையாடுதலை
இடமாறிப் பெய்தலென்போம்.
உறக்கங்கொள்ளுவதை
மழைபொய்த்துப் போனதென்போம்.
இயற்கையொடு
இயைந்திருக்கும்
இடமெலாம்
இவள் வருகை
இயல்பாய்
நிகழ்வது
இன்றளவும்
சத்தியம்.
நண்பர்கள் (24)
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)
வேலு
சென்னை (திருவண்ணாமலை)
![கவித்தாசபாபதி](https://eluthu.com/images/userthumbs/f2/ohefm_24240.jpg)
கவித்தாசபாபதி
ஊட்டி
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![ரசிகன் மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/hrlci_26689.jpg)