அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) |
இடம் | : சிவகங்கை -இராமலிங்கபுரம் |
பிறந்த தேதி | : 20-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 2187 |
புள்ளி | : 600 |
பாரி வள்ளல் மலையோரம் பசும்பொன் கோகுலத்தில் (சிவகங்கை )
கண்ணதாசன் கவி கண்ட கிராமத்திலே (இராமலிங்கபுரம் ) வசந்த முல்லை ஈன்றெடுத்த பிஞ்சு உள்ளம் சுப்ரமணியன் (தந்தை ) சூட்டி வைத்த நற்பெயர்தான் அழகர்சாமி..
கவியின் வரிகளிலே உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளனிவன் (கள்ளழகர் )
மலர் மஞ்சில் மதுத் தேடும் தேனீ !!
மலர் மஞ்சில் புரண்டெழுந்து மகரந்தம் தேனருந்தி,
மலர்தோறும் விளையாடும் தேனீ - மலரின்,
மதுவருந்திச் சிறகுலர்த்தும் தேனீ,
மகரந்தம் கருவிணைந்து மலர்க்கருவில் விதைதோன்றி,
மனமினிக்கும் செங்கனியாய் மாற - நாளும்,
மாந்தர்க்கு உண்டாக்கும் தீனி !!
மலரெல்லாம் கனியாக்கி விதையாக்கி உணவாக்கும்,
மாவள்ளல் பூந்தேனீ ஈங்கு - இன்றேல்,
மாந்தருக்குக் கிடைக்காது தீனி !!
கதிரெழுந்த தும்மெழுந்து காடுகளில் தானலைந்து,
கணமேனும் ஓய்வின்றித் தேனீ - மலரின்,
மணமதுவைத் தான்சேர்க்கும் தேனீ !!
மலர்மதுரத் துளிதம்மை மலர்தோறும் போய்த்தேடி,
ம
பரணியால் புகழ்ந்தோரும்
தலை குனிந்தே மடிந்தோரும்
சமத்துவம் பெறும்
கூற்றுவன் இசை இது
ஆயிரம் இசைக்கருவி
ஒலிசெய்து ஓய்ந்தாலும்
ஆவி ஓய்ந்தபின்பும் ஒலிசெய்யும்
ஆதி இசை பறை
முன்யென்மம் முடிக்கையிலே -காதில்
முணுமுணுத்த ஓசை இது
எவர் இதயம் இறந்தபின்பும்
அழுகின்ற இதயம் இது
இருதய இசைக்கருவி
இசைக்கும் வரை மனித ஆட்டம்
இதை உரக்க சொல்லும்
அதிர்வு இது
ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி
பாறையாய் மாறிவிட்ட
சாதிய மனங்கள் எல்லாம்
சாம்பலாய் ஆகட்டும்
இந்த பறை ஒலியினிலே
இசையோடு வாழ்ந்து வரும்
எம்தமிழர் பரம்பரையில்
கி
எட்டாக் கனியானது
ஏழைக்கு கல்வியிங்கு !
படிக்க விரும்புவது
பகல் கனவானது !
வசதிகள் உள்ளோர்க்கு
வாய்ப்புகள் கிட்டுகிறது !
வறுமையில் உழல்வோர்க்கு
வாழ்க்கை பாலையாகுது !
அரசாங்கம் இன்றோ
ஆண்டிகள் மடமானது !
அழுது தீர்த்தோம்
அனிதாவிற்கு ஒருநாள் !
அத்தோடு முடிந்ததா
அனைவரின் கடமையும் !
ஏழையின் இலட்சியம்
எரிந்தது இடுகாட்டில் !
சுட்டெரித்தது நெஞ்சை
சுடுகாட்டுக் காட்சிகள் !
தோற்றது அனிதாவல்ல
தோல்வி தமிழனுக்கும் !
நாதியற்று நிற்கிறோம்
நானிலத்தில் தமிழரும் !
அரசியல் கட்சிகளும்
அனாதைகள் ஆனதிங்கு !
பதவிக்காக அன்றாடம்
பகல்வேடம் தரிக்கிறார் !
சுயநல உள்ளங்களே
சுற்ற
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
********************************************
தனது ஆத்ம திருப்திக்காக மட்டும் நம் இணையதளத்திலும் முகநூலிலும் நல்ல படைப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் திரு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று . முகநூலிலும் வேறு தமிழ் வலைதளங்களிலும் ஆயிரம் கவிதைகளும் நூற்றுக்கு மேல் ஆங்கில மொழியாக்கக் கவிதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல மனிதரின் பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள
சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !
அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?
பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?
படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே
நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே
ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள
சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !
அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?
பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?
படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே
நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே
இருண்ட பூமி ஒளி பெறவே
இறைவன் மனிதனை
அனுப்பி வைத்தான் .
இருளும் விலகிட தொடங்கிடவே
இறப்பு உண்டென
அறிய வைத்தான் .
வந்தவன் வந்த நிலை மறந்தான்
படைத்தவனை
பல நூறாய் பிரித்து விட்டான் .
கற்பனை வடிவிற்கு உயிர்கொடுத்து
மதங்கள் இதுவென பெயருமிட்டான்.
கள்ளம் இல்லா உள்ளமென
கடவுள் அனுப்பிய மனிதனவன்
கல்லாய் வாழ பழகிக்கொண்டான்
கர்வத்தில் உயிர்களை
காவு கொண்டான்.
அழியும் உலகில் ஆசைகொண்டு
அன்பெனும்
இறைவனை அழித்து விட்டான்
இறுமாப்பு கொண்டு அவன் அலைந்து
இறப்பு இருப்பதை மறந்து விட்டான்.
ஆட்டம் ஆடி முடித்த பின்னே
போட்டது வேஷம் என புரிந்துகொண்டான் .
படைத்தவன் கொடுத
பட்டாம்பூச்சிக்கு
மலர்களில்
தேனை மட்டும் எடுக்கவும்
முள்ளை புறக்கணிக்கவும்
சொல்லிக் கொடுத்தது யார்..?
சொல்லுங்கள்..
கற்றுக் கொள்ள
ஆசைப் படுகிறேன்!
இயற்கை விழியில்
இனமோ குழியில்..!
குடிசை வீட்டுக்குள்
கும்பிடும் தெய்வமென
இருட்டை அகற்றிவிட
இறைவன் வந்தானோ..?
தென்னை ஓலையிலே
தேகம் குளிர்ந்திடவே
கூரை வேய்ந்துவைக்க
குனிந்து பார்க்கின்றான்..!
முன்பின் சொல்லாமால்
முடக்கி வைத்துவிடும்
தடையில் மின்சாரம்
தனக்கே எனசொல்லி
தந்திரம் செய்வோர்கள்
தடுத்திட முடியாது
எந்திரம் பழுதென
ஏய்த்து யிவன்வரவை..!
கஜானா காலியென்று
காரணம் சொன்னபடி
வருடம் பலமுறையாய்
வரியை ஏய்த்தாலும்
விலைகள் பேசாமால்
விடியல் தந்திடுவான்
வறுமை யினத்திற்கு
வள்ளல் யிவனென்று..!
உயரே இருந்தாலும்
உறக்கம் முடிந்தவுடன
அழகிய தமிழால் காதல் செய்து
கவிக்குழந்தையை ஈன்றெடுத்த நாங்கள்
இன்று கைகுழந்தையோடு .....
ஆம் தோழமைகளே நேற்று இரவு 10.00 மணிக்கு
ஆண்மகனை பெற்றெடுத்தோம் ...
தாய் சேய் மிக்க நலம் ...
விருட்சமாய் நான்
ஆணிவேராய் ஆசான் நீ !
அழகான சிலை நான்
செதுக்கிய சிற்பி நீ !
கவிதை நான்
காரணம் நீ !
மலராய் நான்
மணமாய் நீ !
அறியாத வயதில்
அறிவோளியேற்றி
புரியாத வயதை
புரிய வைத்தவன் நீ !
காகமென கரைந்து
என்னைக் கரைசேர்த்தவன் நீ !
வாழ்க்கை புத்தகத்தின்
முகப்புரை நீ !
இளமைக்கு வலுவூட்டி
இயலாமையை இல்லையென்றாக்கி
வானுயர நான் வளர
வழிவகுத்தவன் நீ !
சுண்ணக்கட்டியில்
தீட்டிய வரிகள்கொண்டு
வண்ணமயமான வாழ்வின்
வழியைக் காட்டியவான் நீ !
என்னை அகிலத்திற்கு
அடையாளம் காட்டிய
அறிவு முலாம் பூசிய
கண்ணாடி நீ !
ஆசான் உன் ஆசிபெறவே
அனுசரிக்கிறேன்
இந்த ஆசிரிய
போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்களுக்கும்..
போட்டியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் ..
போட்டியை நடத்திய ஏனைய எழுத்து தள உறுபினர்களுக்கும்
அன்பனின் வாழ்த்துக்கள் ...
போட்டிகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் பரிசு விவரங்கள்.
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்---
1.(nisha rehman) முதல் பரிசு
2.(JINNA) இரண்டாம் பரிசு.
3. (manimee) மூன்றாவது பரிசு
வாழ்த்துக்கள் !......
நண்பர்கள் (509)

வீரா
சேலம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

சரண்யா
கடலூர்

ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்
