என் முதல் காதல்

உன் கண்களை கண்டேன்,
உருகி நின்றேன்;
பந்தய குதிரை பாய்வதை போல ,
பதுமை நெஞ்சில் பதிந்தாய் நீ.
நண்பர்கள் ஆனோம்,
நாட்கள் நகர்ந்தன;
விதையாய் நுளைந்த நீ,
விருட்சிக்க தொடங்கினாய்;
கனவில் உன் கரம் கோர்த்து,
கழிந்தன பல இரவுகள்;
இதுவரை இல்லாத புதிய உணர்வு,
ஓ..! இதுதான் காதலா..?
என் உயிரே நீதான்,
என்றுரைக்க உதடுகள் துடித்தன;
ஆனால் கூறவில்லை,
காரணம் நாணமில்லை,
உன் மனதில் நானில்லை!
கண்களில் ஈரம்,
நெஞ்சினில் பாரம்,
இருப்பினும் இனிகிறது,
என் காதல் வாழ்கை..!!