மரம்
நீ ஜீவித்திருக்கும்போது
உன் மேல் ஒரு இதயத்தை வரைந்து
அதில் காதல் அம்பையிட்டு
அதன் அருகில் என் பெயரையும்
அவள் பெயரையும் எழுதிவைத்தேன்
எங்கள் காதலின் நினைவுச்சின்னமாய்.
நீயோ
உன்னை வெட்டிச்சாய்த்தபிறகும்
காகிதமாய் உருமாறி
என்னவளுக்கான
என் கவிதைகளைச் சுமந்து
எங்கள் காதலுக்காய் தூது சென்றாய்
நீயே என் உயிர்த்தோழன்.