சற்றே இளைப்பாறு...!

மலரே..!நீ
இல்லைஎன்றால்...
அடர்ந்த காட்டில்
அலையும் தென்றல்...
மணம் வீசாது....
*****************************************
விசித்திரமான
இலையுதிர்காலத்தில்...
இவள் கூந்தல் மட்டும்
பூத்துக் குலுங்குகின்றன...!
********************************************
இப்படித்தான் இருப்பார்கள்
தேவதைகள் என்றால்....
இயற்கையைப் படைத்த
இறைவனை வணங்குகிறேன்
............................பரிதி.முத்துராசன்