அவள் பெயர்

நான் பிறக்கும் போது என்னுடன் பிறந்தவள்...
நான் தவழும் போது என்னுடன் தவழ்ந்து வளர்ந்தவள்
ஆனால்....
நான் பயிலும் போது அவளை கண்டுகொள்ளவில்லை
நான் வளர்ந்தேன் அவள் தந்த அறிவை வைத்து-அப்போதும்
அவளிடம் இருந்த நான் மாறவில்லை...
ஆனால் என்னிடம் இருந்த அவள் மாறிவிட்டால்...
நான் இன்னொருவளை புரிந்துக் கொள்ள
எனக்கு உதவியவள்....
அப்போது தேவைபட்டவள்.....
அப்போதும் என்னை உயர்த்தியவள்....
இன்று என்னிடம் இல்லை....
ஆனால் அவளிடம் நான் இருக்கிறேன்...
நான் அவளுக்கு தேவையில்லை என்றபோதும்...
என்னை மறகாதவலாய் இருந்தால்...
நான் அழும் போது என்னுடன் அழுதவள்...
என் துன்பத்தில் அவள் வரிகள் தேவைப் பட்டன...
நான் அவளை மறக்க வில்லை என்ற நம்பிக்கையில் இருப்பவள்...
நான் வளர்ப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கும்
என் உயிர் மெய்யானவள் பெயர்தான்...
தமிழ்................

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (23-Mar-13, 5:29 pm)
பார்வை : 183

மேலே