பொங்கிய மாணவ சமுதாயம்!

அமெரிக்காவின்
வெற்றுத்தீர்மானம்!
இந்தியாவின்
ஏமாற்று வித்தைகள்!

ஜெனீவா வின்
நிறைந்த குளிரிலும்,
ஊடகத்தாரின்
கொதிநிலை செய்திகள்!

இலங்கை அரசின்
ஆணவப் போக்கு!
இந்திய அரசின்
மெத்தனப் போக்கு!

அரசியல் வாதியின்
அறைகூவல்கள்!
உள்ளே,வெளியே
உருப்படா நிகழ்வுகள்!

தி.மு.க.வின்
திடீர் விலகல்!
சி.பி.ஐயின்
உடனடி ரெய்டுகள்!

பார்த்துப் பார்த்து
அலுத்துப் போன
அரசியல் அரங்கத்தின்
சித்து விளையாட்டுக்கள்!

கடந்த வாரம் கடந்து போன
பொய்களின் போக்கில்
நல்லது எதுவெனில்
மாணவர் ஒற்றுமை
காட்டிய மாண்பு!

தெளிவாய் விழித்துக்
கிளர்ந்த கூக்குரல்!
ஒரு கோடி உள்ளங்களின்
உன்னதப் போர்க்குரல்!

பதுங்கிக் கிடந்த
மாணவர் உள்ளம்
பொறுமை இழந்து
பொங்கி எழுந்ததே!

எத்தனை நாள்தான்
ஏய்த்துப் பிழைப்பர்?
இனி
மாண்பு மிகுக்களின்
மண்டை உடையும்.
அரசியல் வியாதிகள்
அஞ்சி நடுங்குவர்!

அன்பால் இணைந்த
மாணவக் கரங்களை
அரசியல் நரிகள்
பிரிக்காதிருக்கட்டும்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (24-Mar-13, 1:11 pm)
பார்வை : 194

மேலே