நான் நேசிக்கும் யேசு

நட்சத்திர வாலை
பிடித்திறங்கி இப்புவி
வந்து புகுந்தான் -
மரியாளெனும் காளி
வயிற்றினிலே அவன் !!!!!!

புரட்சி வேர்களின்
ஆற்றல் அவன் !!!!!!

புகழ்ச்சி வெறுத்த
புண்ணியன் அவன் !!!!!!

பூகம்ப சொற்கள்
பூக்களாய் உதிர
புதிய யுகத்தின்
தொடக்கம் அவன் !!!!!!

சவுக்கும் சிலுவையும்
சுமக்க தெரிந்த
சத்தியலோக அரசன்
அவன் !!!!!!

ஜெருசலேமில் சீறி
பாய்ந்த ஒரேயொரு
ஆணும் அவன் !!!!!!

சிலுவைபாட்டை
ஏற்கதுணிந்த ஒரேயொரு
தர்மம்
அவன் !!!!!

மேற்கரசின்
நிலத்தினிலே
அஹிம்சை என்னும்
வேருக்கு நீர்விட்ட
நெருப்பும் அவன் !!!!!

வெள்ளிமலை மீதினிலே
மிச்சகாலம்
வாழ்ந்ததாக -மறைக்கப்பட்ட
வாழ்க்கையோடு
வாழ்ந்து மறைந்த கிறிஸ்து
எனும் ஞானி அவன் !!!!!!

*******************************************************************
இந்த கவியை நட்புடன் இயேசு எனும் ஞானியை நேசிப்பவர்களுக்கு சமர்பிக்கிறேன் வான்காந்தத்தில் வாழும் ஏசுவிற்கும் சேர்த்து ....... அல்லேலுயா ..................................


அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வலி ) (24-Mar-13, 1:13 pm)
பார்வை : 183

மேலே