நகைச்சுவை துணுக்குகள்
தோழி 1 : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உனக்கு அத யார் சொன்னாடி?
தோழி 1 : என் வீட்டுக்காரர்தான், காலையில கோலம் போடும்போது பார்த்தாராம்.
நண்பர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணியது தப்பா போச்சுப்பா?
நண்பர் 2: ஏண்டா என்ன ஆச்சு?
நண்பர் 1: கிளி மாதிரி பேசினதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அருக்கிறாடா.
மகன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டில எழுத முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
மகன் : அப்படின்ன என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெளுத்து போடுங்க.
காதலன் : உங்க அப்பாக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒன்னுதான்?
காதலி : எதனால அப்படி சொல்றீங்க?
காதலன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்கறது இல்லயே.
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்த கேள்வி?
பெண் : கேழுப்பா
பையன் : எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போரீங்க?
பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு
பையன் : உங்க தங்கச்சியோட லவ்வர்.