மனிதனாக ஆசைப்படு!

அறிஞனாக ஆசைப்பட்டு
அனைத்தையும் கற்றான்!

கலைஞனாக ஆசைப்பட்டு
பல கலைகளை கற்றான்!

ஞானியாக ஆசைப்பட்டு
பல ஞானத்தை கற்றான்!

சாமியாக ஆசைப்பட்டு
பல தியானத்தை கற்றான்!

கவிஞனாக ஆசைப்பட்டு
மொழியை முழுமையாய் கற்றான்!

கடைசிவரை அவன்
மனிதனாக மட்டும் ஆசைப்படவேயில்லை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-13, 3:25 pm)
பார்வை : 268

மேலே