சொல்லாமல் மறைத்துவிட்டேன்

எத்தனை முறைதான்
தலை வாருவாய்
சலித்துக்கொள்கிறது சீப்பு

நொடிக்கு நூறுமுறையா!
என்னை விட்டுவிடு
கதறும் கண்ணாடி

இத்தனை முறையா உச்சரிப்பாய்!
ஒரே பெயரை
நொந்துக் கொள்கிறது நாக்கு

ஆயிரம் முறையா எழுதுவாய்!
ஒற்றை வார்த்தையை
அலுத்துக் கொள்கிறது பேனா

எவ்வளவு தான் சுமப்பது
உன்னவள் பெயரை
விழிப்பிதுங்கும் காகிதம்

இப்படியெல்லாமா?
புரளுவார்கள்
வினா எழுப்பும் பாய்

எப்படியிருந்த நீ
இப்படி ஆகிவிட்டாய்?
கேட்கிறது மனம்

என்னச் சொல்ல...

அத்துனைக்கும் காரணம்
நீயென்று சொன்னால்
இத்துனையும் சபித்துவிடுமே என்று
மறைத்து விட்டேன்


என் காதலை

எழுதியவர் : namaki (14-Apr-13, 7:54 pm)
பார்வை : 111

மேலே