பெண்ணே போதும் நிறுத்து,!!

பெண்ணே போதும் நிறுத்து,
உன் இனவெறி தாக்குதலை!!
அழிந்துவிட போகிறது ஒட்டுமொத்த ஆணினமும்!!

பார்வையால் பல நூறு குண்டு மழையை பெய்துகொண்டு இருக்கிறாய் !!
புன்னகையால் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்கிறாய்!!
வெட்கப்படுவதுபோல் நடித்து வெடிகுண்டுகளை வீசுகிறாய்!!
முந்தானையில் மூடிய ஏவுகணைகளால் ஏடாகூடம் செய்கிறாய் !!
இல்லாத இடையை ஆட்டி ஆட்டி இம்சை பண்ணுகிறாய்!!

ஐந்தரை அடி அணு ஆயுத கிடங்காய் வாழ்ந்து,
ஆணினத்தையே அழிக்க முற்படுகிறாய்!!

பெண்ணே போதும் நிறுத்து,
உன் இனவெறி தாக்குதலை!!
அழிந்துவிட போகிறது ஒட்டுமொத்த ஆணினமும்!!

எழுதியவர் : பாலசுப்ரமணியன் கணபதி (17-Apr-13, 2:20 pm)
சேர்த்தது : balavinkavidhaigal
பார்வை : 66

மேலே