உடல் தானம்
யானை இறந்தவுடன் அதன்
தந்தங்கள் கலைப் பொருட்களாக
உயிர் பெறுகின்றன
மாடுகள் இறந்தவுடன் அதன்
தோல்கள் மிருதங்கத்தில்
பொருத்தப்பட்டு உன்னத
இசையாக உயிர் பெறுகின்றன
இப்படி ஐந்தறிவு படைத்த
எல்லா உயிரினங்களும்
இறந்த பின்னும் வாழ்ந்து
கொண்டுதான் இருகின்றன
ஆறறிவு படைத்த
மனிதா நீ! மட்டும் ஏன்
இறந்த பின்பு விலைமதிப்பற்ற
உன் உடல் உறுப்புக்களை
யாருக்கும் பயன்படாத வகையில்
உன்னுடனே புதைத்து விடுகிறாய்
சிந்தித்து பார் மனிதா
நீ இறந்த பின் வெறும்
மண் தின்ன கொடுத்து
விடுகிறாய் உன் உடலை
அதுவே உன் உடலுறுப்புக்களை
தானம் செய்து பார்
உன்னால் நான்கு உயிர்கள்
உயிர்ப்புடன் வாழ
உன் உடலுறுப்புக்கள்
பயன்படுவதால்
நீயும் இவ்வுலகில்
உயிரோடு வாழ்ந்து
கொண்டிருக்கிறாய்
என்பதை உணர்வாயாக
மனிதா!
மறைந்த பின்பும்
உயிர் வாழ
உடல் தானம் செய்வீர்