VAIGAIMANI - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : VAIGAIMANI |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 01-Aug-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 48 |
அம்மா அவள் கருவறையில்
எனக்கு இடம் கொடுத்தாள்
அப்பா அவர் நெஞ்சறையில்
இடம் கொடுத்தார்
அம்மா உயிர் தந்தாள்
அப்பா அறிவு தந்தார்
என்னை அவர் தோள்மீது
ஏற்றிக்கொண்டு வானத்தை
காட்டினார்
மகனே அந்த வானத்தை
போல வாழ்க்கையில் உயரே
சென்றுகொண்டே இரு
ஒரு போதும் கீழே
விழுந்துவிடாதே என்றார்
உனக்கு உற்ற தோழனாய்
நான் இருக்கிறேன்
உன்னை தாங்கி பிடிக்க
என்று நம்பிக்கை ஊட்டினார்
நான் வாழ்க்கையில்
வெற்றி பெற அவர்
சந்தித்த தோல்விகள்தான்
எத்தனை எத்தனையோ
அன்பு என்ற சொல்லுக்கு
பொருள்தான்
அம்மா
நீ! இல்லை என்றால்
இவ்வுலகில் அன்பே
இல்லை அம்மா
தொப்புள்க் கொடியில்
சிறு உயிர் கொடுத்தாய்
இந்த உயிர் வளர
உன் இரத்தத்தை
பாலாய் கொடுத்தாய்
நான் தூங்க
நீ! விழித்தாய்
நான் உண்ண
நீ! உண்ணா விரதம்
இருந்தாய்
நான் புத்தகம் சுமக்க
நீ! செங்கல் சுமந்தாய்
நான் புத்தாடை உடுத்த
நீ! பித்தளை தேய்த்தாய்
ஒப்பற்ற பாசமடி
உன் பாசம் இதை
ஒப்புக்கொள்ள மனித
மனம் ஒரு
வேஷம்
அன்னை மண்ணே போய்
வருகிறோம்
உன்னை விட்டு அகதிகளாக
போய் வருகிறோம்
உடமைகளை இழந்து
உருப்படிகளாக
போய் வருகிறோம்
உரிமைகளை இழந்து
உயுரற்று
போய் வருகிறோம்
வாழ்க்கை இழந்து
வாழ வழித் தேடி
போய் வருகிறோம்
வேட்கை இழந்து
வெறும் கையோடு
போய் வருகிறோம்
என் அன்னை மண்ணே
கவலை கொள்ளாதே
எங்கள் இரத்தத்தினை
கரைகளாக பதியவிட்டுத்தான்
சென்றிருக்கிறோம்
நம் சொந்தங்களை
விதைகளாக விதைத்துவிட்
வீட்டு குழாய்களிலும்
வீதி குழாய்களிலும்
விடுதி குழாய்களிலும்
சொட்டு... சொட்டாக
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது
தண்ணீர்
தான் அழிந்து கொண்டுவருவதை
எண்ணி
வைகைமணி
வீட்டு குழாய்களிலும்
வீதி குழாய்களிலும்
விடுதி குழாய்களிலும்
சொட்டு... சொட்டாக
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது
தண்ணீர்
தான் அழிந்து கொண்டுவருவதை
எண்ணி
வைகைமணி
தொண்டனென பெயரேடுத்தோம்
சொந்த பந்தம் நாம் தொலைத்தோம்
தலைவனை தந்தை என்றோம்-அவர்
குடும்பமே சொந்தம் என்றோம்
தலைவன் முகம் பார்த்தே -நாம்
முகம் மலர்ந்தோம்
அவர் கை அசைவுக்காக
கைதியாய் நின்றோம்
கட்சிக் கொடி கையில்
ஏந்தி நடையாய்
நாங்கள் நடந்தோம்
எங்கள் கட்சி
ஆட்சிக்கு வந்தால்
அலப்பறையும் நாங்கள்
செய்தோம்
தப்பு செய்தாலும்
தலைவனை விட்டுக் கொடுத்ததில்ல
மப்பில் இருந்தாலும்
மாப்புள நாக்கு புரண்டதில்ல
சீட்டுக்கும் வரல -உந்தன்
நோட்டுக்கும் வரல
உன் அன்புக்காக வந்தோம் தலைவா
அடிமையாக நின்றோம் தலைவா
உனக்காக உழைக்கும்
உண்மைத் தொண்டன்
நாங்கள் தான்
எழுடா மனிதா
எரியும் அனலாய்
நடடா மனிதா
நாளை உனதாய்
திறடா மனிதா
கண்களை நீயும்
வாழ்க்கை இருக்கு
வாய்ப்பும் இருக்கு
பாதைகள் இருக்கு
பாதமும் இருக்கு-நீ!
ஏங்குவது எதற்கு?
துங்குவது எதற்கு?
இரவும் இருக்கும்
பகலும் இருக்கும்
துன்பம் இருக்கும்
இன்பம் இருக்கும்
பகைமை இருக்கும்
பாசம் இருக்கும்
காமம் இருக்கும்
காதல் இருக்கும்
துரோகம் இருக்கும்
தூய்மை இருக்கும்
முள்ளும் இருக்கும்
மலரும் இருக்கும்
இதுதாண்ட உலகம்
இதனை
அறிந்து நடந்தால் உனக்கும்
அறிவு பிறக்கும
எழுடா மனிதா
எரியும் அனலாய்
நடடா மனிதா
நாளை உனதாய்
திறடா மனிதா
கண்களை நீயும்
வாழ்க்கை இருக்கு
வாய்ப்பும் இருக்கு
பாதைகள் இருக்கு
பாதமும் இருக்கு-நீ!
ஏங்குவது எதற்கு?
துங்குவது எதற்கு?
இரவும் இருக்கும்
பகலும் இருக்கும்
துன்பம் இருக்கும்
இன்பம் இருக்கும்
பகைமை இருக்கும்
பாசம் இருக்கும்
காமம் இருக்கும்
காதல் இருக்கும்
துரோகம் இருக்கும்
தூய்மை இருக்கும்
முள்ளும் இருக்கும்
மலரும் இருக்கும்
இதுதாண்ட உலகம்
இதனை
அறிந்து நடந்தால் உனக்கும்
அறிவு பிறக்கும
பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.
இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.
தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..
இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்
என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.
வ
ஒத்தையடி பாதையிலே
ஒய்யாரமாய் போறபுள்ள
பக்கத்தில் நானிருந்தும்
பார்க்காமல் போவதெங்கே?
அந்தி வரும் நேரத்திலே
முந்திக்கொண்டு போறபுள்ள
முறைமாமன் நானிருக்க
முறைத்துக்கொண்டு போவதெங்கே?
கண்டாங்கி சேலை கட்டி
கட்டழகா போறபுள்ள
அத்தமகன் சொல்லும் சொல்லை
கேட்காமல் போவதெங்கே?
மல்லிபூ கொண்டைக்காரி
மரிக்கொழுந்து உடம்புக்காரி
மகராஜன் நானிருக்க
மயங்காமல் போவதெங்கே?
பத்து நாளா தூக்கமில்லை
பாவி உந்தன் ஏக்கத்தில
கண்ணு ரெண்டும் சிவந்திருக்கே
காணாமல்
வயதோ எழுபதடி!
மனமோ இருபதடி!
இருபதோ எழுபதை
அடக்க நினைக்குதடி !
எழுபதோ இருபதை
ஒடுக்கி வைக்குதடி!
தலைமுடியோ நரைத்ததடி!
இருந்தும்
காமமுடி நரைக்கலையடி!
கட்டியணைக்க கட்டில்துனை
நீயும் இல்லையடி !
கஞ்சீ வடித்து கொடுத்த
வஞ்சீ நீயும்
தூரதேசம் போனாய்
திரும்பி வரமாட்டாய் என்று
தெரிந்தும் கூட இந்த
கிழட்டு மனம் ஏங்குதடி!
உன் நினைவால் வாடுதடி
ஒண்டிக்கட்டை ஆனேனடி !
ஒடுங்கி நான் போனேனடி !
பத்துபிள்ளை பெற்றும் கூட
படுத்துக்கொள்ள இடமில்லையடி !
கொடுப்
அழகு
வாலிபம் தொடங்கியதை
வரைந்து சொன்ன
மீசை அழகு
நெத்தி தொடும்
கேசம் தனை -
என்னை கண்டு
கோதுதல் அழகு
கண்பார்த்து
நிற்கும்போது
நான் பார்க்கையில்
விண் பார்க்க
விழி மாற்றுதல் அழகு
என் நிழல் போல
நெடுந்துரம்
எனை தொடர்தல்
அழகு
வியர்வை
வழிந்தபடி
தன் முதல்
காதல் சொல்ல
தயக்க நடை அழகு
தைரியம் பெற்று
சொன்ன முதல்
வார்த்தை அழகு
என் சுடும்
பார்வை
எதிர் நோக்க
கண்ணில் வரும்
பயம் அழகு
என் பார்வை
மண் பார்க்க
மனதில் மொழியை
என் புன்னகையில்
அறிதல் அழக
நண்பர்கள் (9)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
prabujohnbosco
நாகர்கோவில், கன்னியரகுமர
![தவமணி](https://eluthu.com/images/userthumbs/b/kexno_13729.jpg)
தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
![இரா-சந்தோஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/njhaw_20698.jpg)
இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
![பிரான்சிஸ் சேவியர்](https://eluthu.com/images/userthumbs/a/fyoea_3038.jpg)