அப்பா
அம்மா அவள் கருவறையில்
எனக்கு இடம் கொடுத்தாள்
அப்பா அவர் நெஞ்சறையில்
இடம் கொடுத்தார்
அம்மா உயிர் தந்தாள்
அப்பா அறிவு தந்தார்
என்னை அவர் தோள்மீது
ஏற்றிக்கொண்டு வானத்தை
காட்டினார்
மகனே அந்த வானத்தை
போல வாழ்க்கையில் உயரே
சென்றுகொண்டே இரு
ஒரு போதும் கீழே
விழுந்துவிடாதே என்றார்
உனக்கு உற்ற தோழனாய்
நான் இருக்கிறேன்
உன்னை தாங்கி பிடிக்க
என்று நம்பிக்கை ஊட்டினார்
நான் வாழ்க்கையில்
வெற்றி பெற அவர்
சந்தித்த தோல்விகள்தான்
எத்தனை எத்தனையோ
என்று என்னும் போது
என் கண்களில் கருமேகங்கள்
சூழாமல்
கண்ணீர் மழை
பொழிகின்றன
என் வெற்றிகளை தன்
வெற்றி போல் கொண்டாடும்
மனம் படைத்தவரே
உன்னை வணங்குகிறேன்
நீதான் ரியல் ஹீரோ
உன்னை வெல்ல எவனும்
இன்னும் இம்மண்ணில்
பிறக்கவில்லை