மேனகையோ மின்னலின் வெண்ணுடையில் வந்தாயோ

மேனகையோ மின்னலின் வெண்ணுடையில் வந்தாயோ
வானத்து வெண்ணிலவும் வாய்பிளந்து பார்க்குதடி
தேனொழுகும் பூவெல்லாம் தென்றலில் ஆடுதடி
மானின் விழியாள் மலர்மேனி தேவதைக்கு
நானெழுத வோபா நவில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-25, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே