மின்சாரம் வருமா

அம்மா எப்பம்மா மின்சாரம் வரும்
புழுக்கம் தாங்காத பிஞ்சுகளின்
வியர்வையோடு வெளிவரும் கெஞ்சல்கள் .......

எது எதற்கோ தாலட்டு பாடும் தாய்
இதற்கும் பாடுகிறாள் தாலாட்டு
முந்தானை விசிறியால் வீசி வீசி
பாடி கண்ணயர்ந்தால் தாய் ........

உள்ளே படுத்தால் இருட்டு பயம்
வெளியே படுத்தால் திருட்டு பயம்
உடல் புழுக்கத்தோடு
உள்ளமும் புழுங்கி ஏங்கி தவிக்குது மக்கள்கூட்டம்

பள்ளிக்கு போகும் ஏழை பிள்ளைகள்
படிக்க முடியாமல் தவித்து வாழுது
வரமாய் வந்து ஒளியை கொடுத்து
இன்று சாபமாய் இருட்டில் மக்கள் ........

சோறு ஆக்க கேசும் இல்ல
கரண்ட் அடுப்புக்கு மின்சாரமும் இல்ல
அடுப்படி வேலைகள் பாடாய் போச்சு
விறகை தேடும் வேலை வந்தாச்சு ........

மிக்ஸியும் கிரைண்டரும் ஓய்வுக்கு போச்சு
அம்மியும் குழவியும் பயனுக்கு வந்தாச்சு
மின்சார உலகம் பொய்யாய் போனதால்
சம்சாரி வேலை பெருகி போச்சு .........

பிஞ்சு குழந்தையோ அழுது புலம்புது
எ/சி போட்டும் இயங்க மறுக்குது
கொசுகடியாலே உடலும் வீங்குது
குழந்தைகள் எல்லாம் வெந்து சாகுது .......

வெளியில் போனால் மண்டை காயுது
உள்ளே இருந்தால் உடலும் வேர்க்குது
கரண்ட் இல்லாத காரணத்தாலே
மின் விசிறியும் கூட இயங்க மறுக்குது ......

தொழில் துறை எல்லாம் முடங்கி போச்சு
தொழிலாளி வயிறு காஞ்சி போச்சு
மின்சாரம் இயங்க மறுத்து போனதால்
ஏழையின் பொழப்பு இருண்டு போச்சு .......

மூச்சு கொடுக்கும் சக்தியும் இதுவே
மூச்சை எடுக்கும் சக்தியும் இதுவே
அவசியமான அருவைசிகிச்சையும்
ஆபத்தாய் முடியுது பல நேரங்களில் .....

மின்சாரம் எனபது சம்சாரம் போலவே
அவசியமான ஒன்றாய் போச்சு
சிக்கனம் பழகி உற்பத்தியை உயர்த்தி
ஊரில் எங்கும் ஒளியை கொடுப்போம் .........

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Apr-13, 8:34 am)
Tanglish : minsaram varumaa
பார்வை : 158

மேலே