உன் ஒட்டைப்பாத்திரம் ஒழுகாதோ...?

குறள் தந்த கவிதை-11

அடமழையாய்
நீ வரவேண்டாம்

அடிக்கும்
அக்னி வெயிலுக்கு
அட..மழை மேகமே!

உன் ஒட்டைப்பாத்திரம்
ஒழுகாதோ...?
சொட்டு சொட்டாக
ஒரு துளியேனும்
என் வாயில் வீழாதோ..?
அமுதாக இனிக்காதோ...?
..............பரிதி.முத்துராசன்

கவிதை தந்த குறள்-11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (21-Apr-13, 8:35 pm)
பார்வை : 65

மேலே