பதிலை தேடி

மதிப்பிற்கு உரிய எழுத்து தளத்தின் உறுப்பினர்களே
அன்பு தோழர்களே,தோழிகளே அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வணக்கங்கள்
தங்கள் அனைவரிடமும் சில பதில்களை தேடி இந்த கேள்விகளை தங்கள் மேலான பார்வைக்கு வைத்து உள்ளேன்,
சந்தேகங்கள் எழுந்தால் நண்பர்களிடம் கேட்பது தானே சிறந்தது என்பதால் தங்கள் அனைவரிடமும் கேட்டு தெளியவே இந்த முயற்சி,
நடுநிலையாய்,நல்ல பதில்களை தருவீர்கள் என்ற மாபெரும் நம்பிக்கையில் தொடர்கிறேன்
மிக சமிபத்தில்,நமது தளத்தில் வெளியான மதம் ஒழிப்போம் என்ற படைப்பு பல விதமான சர்ச்சைகளை தளத்தில் எழுப்பியது அனைவரும் அறிந்ததே அதற்க்கு சார்பாக சில தோழர்களும்,எதிராக சிலதோழர்களும் கருத்துக்களை பகிர்ந்து இருந்தோம்
எதிராக கருத்து பதிந்தவன் என்ற முறையில் சில
கேள்விகள் சற்று விளக்கமாக தங்கள் அனைவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவே இந்த படைப்பை எழுத வேண்டிய சூழ்னிலை தந்த இறைவனுக்கும்,மதம் ஒழிப்போம் என எழுதிய தோழருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
புனித தளங்கள் ஆகிய கோவில்,பள்ளிவாசல்,தேவாலயம்,புத்த பீடம் ஏனைய எல்லா தளங்களையும் தோழர் சொன்னது போல் உடைத்து விடுவதாலும்,இரைனூல்கள் அனைத்தையும் தீ யிட்டே கொளுத்தி விடுவதாலும் மனிதன் ஒன்று பட்டு ஒற்றுமையாய்
வாழ்வானா?
சரி மதங்கள் அனைத்தையும் ஒழித்து விட்டோம் என்றே வைத்து கொள்ளுங்கள் மொழியால் வேறு பட்டு நிர்ப்பானே அப்பொழுது தோழர் என்ன ஒழிக்க சொல்வர்?
மொழிகளை ஒழிப்போம் என்பாரோ அப்படியே மொழிகளை ஒழித்துவிட்டு சைகையாலும் ஊமை பாஷையிலும் பிதற்றுவோம் நண்பர்தான் சொல்லி விட்டாரே என்றால்
நிறத்தில் வேறு பட்டு நிர்ப்போமே அப்பொழுது தோழர் நிறத்தை ஒழிப்போம் என சொல்வாரா?
சரி தோழர் சொல்லிவிட்டார் என்பதற்காக தோலை
உரித்து விட்டோம் என்றே வைத்து கொள்வோம்
உயரம்,குள்ளம்,பருமன்,ஒல்லி என வேறு பட்டு நிர்ப்போமே அப்பொழுது எதை ஒழிக்க சொல்வார்?
சரி அவர் மிகமிக புத்திசாலி ஏதோ செய்து அனைவரையும் சரிசமமாக செய்து விட்டார் என்றே வைத்து கொள்வோம்
ஆண் பெண் என வேறு பட்டு நிர்ப்போமே அப்போது தோழர் எதை ஒழிக்க சொல்வார்?
இப்படி பல வேற்றுமைகளிலும் மனிதன் ஒன்று பட்டு வாழ்வது சரியா சாத்தியமா,இல்லை அனைத்து வேற்றுமைகளையும் கலைத்து,எரித்து,உடைத்து விட்டால் ஒற்றுமை ஆகிவிடும் என்பது சரியா சாத்தியமா?
இறைவன் எதற்க்காக பல வேற்றுமையில் அதற்கே உரிய தனித்தன்மையில் படைத்தார்?
அறிவியல் என்பது இருப்பதை கண்டு பிடிப்பது தானே?புதிதாக படைப்பது இல்லையே?
ஒரே ஒரு இறந்த பூச்சியை மனிதனின் கண்டுபிடிப்பு உயிர்பித்து விட முடியுமா?
இல்லை இறக்க போகும் ஒன்றை இறக்காமல் செய்ய முடியுமா?
எல்லா இறை நூல்களையும் சற்று ஆழமாக பாருங்கள் இன்றைய கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அதில் இருக்கிறதா இல்லையா?
இதை எல்லாம் கருத்தில் கேட்டல் பதில் தராது மாறாக மிருகங்கள் மதத்தீவிரவாதிகள் என்று சொல்வது சரியா?
புதிதாக ஒரு உலக பொதுமறை எழுதிவிட்டதாக
மார்தட்டி அலைபவர்களை என்ன சொல்லி புரிய வைப்பது?
பெற்ற தாயையும்,படைத்த கடவுளும்,ஒன்று அல்லவா?
இவர்களை பழிக்கும் போது எதிர்த்து கேட்பது நமது கடமை அல்லவா?
கண்டும் காணாது இருந்தால் இன்னும் துணிவுடன்
நிறைய மனங்கள் காயப்படுத்துவார்,காயப்படுத்தப்படும் என்ற ஒரே
நோக்கத்துக்காக தான்,நானும் நண்பர்களும் கடமையென எதிர்த்தோம் இது தவறு எனில் தாராளமாக தெரிவியுங்கள்
தவறு இல்லை என்றாலும் தங்களின் கருத்தை கண்டிப்பாய் பதிந்து நண்பர் செய்த தவறை உணர்த்துங்கள் என தாழ்மையுன் கேட்டு கொள்கிறேன்
அன்புடன் நவீன் மென்மையானவன்