விபச்சாரம்...(குறுங்கதை)

ரங்காச்சாரி நல்லவர்,
நாளும் தெரிந்தவர்.
சுத்த சைவர்,
நடுத்தர வர்க்கமானாலும்,
நியாயமானவர்.

நிதானமாக நாளிதழ்கள் புரட்டினாலும்,
புரண்டு தவிப்பது இவரே.
வரும் கற்பழிப்பு செய்திகள்,
மனதை ரணப்படுத்தும்.

இவரின் பாராட்டைப் பெறுவது
விபச்சார அழகிகளின் கைது
செய்தி மட்டுமே.

நிதம் நிதம்,
விபச்சாரம் கொலைக்கு
சமமென்று கோஷமிடுவார்.

இவரின் எதிர்
அடுக்ககத்தில் ஒர் பேரழகி.
பார்வையே போதும்,
பஸ்பமாகி விழ.

நேர்த்தியான முகம்,
நெஞ்சை அள்ளும் சிரிப்பு,
வழிந்தோடும் கூந்தல்,
வகையான நடை.

இவள் உடுத்தும் உடையனைத்தும்,
பார்ப்பவரை உடையச்செய்யும்.

தினமும் காலையில் ஒருவர்,
மாலையில் ஒருவர், காரில்
ஏற்றி, இறக்கி விடுவர்.

உதட்டுச் சாயம் கூட,
காலை வேறு, மாலை வேறு.
இதைக் கூட கூர்ந்து கவனித்து,
கவனத்தில் வைத்திருக்கின்றனர்,
தெருவாசிகள்.

ரங்காச்சாரி மட்டும்,
அழகியை ஒரு தெரு நாயைப்
போல் பார்பார்.

அவள் விபச்சாரியே தான்,
என்று முடிவும் செய்துவிட்டார்.

இவருக்கு ஒரு மகன்,
இரு மகள்கள் உண்டு.

மூவரையும் கண்ணியம்
குலையாமல் வளர்கிறார்.

இருவரில் ஒருத்தி,
இறந்துபோன மனைவிபோல்,
மிக மிக அழகானவள்.
பல துணை இயகுனர்கள்
தூண்டில் போட்டும்,
சினிமாவில் சிக்காதவள்.

இன்னொருத்தியோ,
தன் உயிர் நண்பன்
பரிசாய் கொடுத்த
உயர் ஜாதி நாய் - பிங்கி.
இவளும் கூட, எந்த நாயைப்
பார்த்தும் பல் இலிக்காதவள்.

ஒரு நாள் கல்லூரி
சென்ற மகன்,
நடுரோட்டில் லாரி மோதி
விழுந்தான்.
அவசர சிகிட்சையில் அனுமதி.
பெரிய அறுவை சிகிச்சை
செய்து காப்பாற்றினார்.

பல இடத்தில கடன்பட்டதால்
சமாளிக்க முடியாமல்
தற்கொலைக்கு தயாராகி,
தைரியப் பற்றாக்குறையால்
தப்பித்தார்.

இதிலிருந்து மீள,
ஒரு நண்பனின்
அறிவுரை படி
முதலில் கோபப்பட்டு
பின்பு வெறும் பணத்திற்காக,
மனதை கல்லாக்கி,
தன் மகளை
கூட்டிக்கொண்டு,
ஒரு இடைத் தரகர்போல்,
தோட்டத்து பங்களாவிற்குள்
நுழைந்தார்.

முதலாளி மேலும் கீழும் பார்த்து
பரவசப் பட்டார்.
கொள்ளை அழகில்
சொக்கி நின்றார்.

ரங்காச்சாரி அழுதுகொண்டே,
முதலாளி காதில்,
பாசமா வளர்த்துட்டேன்,
அதிர்ந்து கூட நடக்க மாட்டாள்,
வீட்டில் இருபதே தெரியாது,
கொஞ்சம் பார்த்து நடத்துங்கோ என்றார்.

சரி என்றதுபோல்
சிரித்துக்கொண்டே
அவளை அறைக்குள்
அழைத்துக்கொண்டு
அறைக்கதவைத் தாழிட்டார்.

வெறியோடு இருந்த
நாயொன்று சீறிப் பாய்ந்து
தன் ஆசை மகளை
சிதறவிட்டு, சீர் குலைத்தது.

காமவேட்டையின் சத்தம் கேட்டு,
ரங்காச்சாரி வராண்டாவில்
ஒரு கிழ நாய்போல்
கூனிக் குறுகி
துண்டால் வாய்பொத்தி,
விம்மி விம்மி அழுகிறார்.

சில மணிநேரம் கழித்து
வெளியே வந்த முதலாளி,
ரங்காச்சாரியிடம்,
ஒரு வேலை இவள் பிரசவித்தாள்,
ஒவ்வொரு குட்டிக்கும்,
இரண்டு லட்சம் தருவேன்
என்றார்.......!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (30-Apr-13, 5:27 pm)
பார்வை : 479

மேலே