விட்டுக் கிடப்பதோ

கட்டுக்குலை மொட்டின்மல
. ரெட்டுத்திசை கிட்டும்வரை
. தொட்டுத்தரும் தென்றல் மணமே -அது
கொட்டும்மது பட்டென்இதழ்
. பக்கம்நடை கட்டத்தடை
. குற்றமென இட்டாற் தகுமோ
குட்டிச்சிறை ஒட்டிக் கிட
. சட்டம் இது விட்டோம் இலை
. பட்டுத்துடி என்றோர் வாழ்வை -இவர்
விட்டுப்பெரும் வெட்டைவெளி
. கட்டுக்களைந் திட்டப்படி
. எட்டி நடைகொள்ளல் வருமோ

மட்டுப்பட இட்டத்துடன்
. விட்டுப்பெரு விண்ணில் எழு
. பட்சிச் சிறகிட்டாய் இறைவா - அதை
முட்டுப்பட நெட்டுக் கிளை
.வட்டில்கூடு கட்டித்துயில்
. கொட்டிக்கிட என்னத் தகுமோ
சிட்டுக் குருவிக்குத் தரை
. விட்டுச்செல ரட்டைச் சிற
. கொட்டக் குறு வெட்டக் கருதா
விட்டுப்பற வெட்டைவெளி
. அட்டப்பெரு திக்குக்கிடை
. கட்டுப்படும் எல்லையிலதாய்

பட்டுத் துணி கட்டிப் பெரும்
. இரட்டை மனை ,கட்டில் துயில்
. மட்டத்தினில் வாழ்ந்தான் தமிழன் - அதை
விட்டுப் பெருங்கொட்டும் மழை
. வெட்டுமிடி மின்னலிடை
. பட்டுக் கொளும் துன்பம்பெரிதே
பெட்டை யவள் நெட்டை நுத
, லிட்டோர்சிறு பொட்டேயென
. கொட்டும்நில வெட்டும்சுகமும் - தனில்
பட்டுங் குளிர் சொட்டும் மழை
. இட்டுத்திரி பஞ்சென் முகில்
. எட்டுஞ்சு தந்(தி)ரம் வேண்டும்

எட்டுத்தொகை சொல்லுங்கதை
. வெட்டும்தனம் தட்டும் முறம்
. சொட்டும் மறவீரம் எமதே - அவன்
கட்டையுடல் வெட்டிச் சிறு
. காட்டில் விறகிட்டுக் கரி
. கொட்டச் சுடும் சாம்பல் தனையே
கட்டுத் தடையின்றிக் கரை
. தொட்டுத்திரிவட்டத் திரை
. குட்டை நதிநீருள் கரைய - எனும்
திட்டமுடன் பட்டப்பகல்
. வெட்டுமொரு வாளும்கொளப்
. கூட்டமென்றே எம்முள் நுழைவார்

விட்டும்மொழி பற்றும்இலை
. நட்டமெது இற்றைவரை
. பெட்டிப்படம் கண்டோமெனவே - நாம்
மொட்டுக் களைச் சுட்டுக்கதிர்
. விட்டுபிரிந் திட்டோர் இதழ்
. தொட்டு மலர் நின்றேயாடும்
வட்டசுனை நீரில்முக
. விம்பம்விரல் தொட்டுகொள
. விட்டுசெலும் வாழ்வென் றெண்ணா
அட்டமதில் தொட்டோர்சனி
. அன்னதுயர் செய்வோர்தமை
. விட்டுக்கலை தீராய் வினையை!

எழுதியவர் : கிரிகாசன் (3-May-13, 11:11 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 91

மேலே