காத்திருக்கிறேன்!!!

என் இதயம் மரபாய்
வளைந்து காதல் நாணை
பொருத்தி குறி தவறாமல்
அவள் மேல் எய்கிறது!!!
அவளோ காம்பில்லா நறுமுகை
இரண்டையும் மலர்ந்து நாணத்தோடு
நல்வரவு அளித்து காதல்
நாணை இதய சிம்மாசனத்தில்
இரத்தின கம்பளம் விரித்து
ஆட்சியில் அமர்த்தி விட்டாள்!!!
நான் விழித்திருக்கும் பொழுதுகளைவிட
கண்மூடி துயில்கொள்ளும் சமயங்களில்
அவளோடு ஓய்வில்லாமல் ஊர்வலம்
சுற்றும் பொழுதுகள் அதிகம்!!!
உருவமே இல்லாத காதல்
என் அகத்தையும் புறத்தையும்
சத்தமில்லாமல் கட்டுக்குள் கொண்டு
அதன் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கிறது!!!
அவளிடம் பேசப்போகும் சிலநிமிடங்களுக்காக
கண்ணாடி முன் பல
மணி நேரம் ஒத்திகை
பார்த்து கொண்டு இருக்கிறேன்!!!
தெரிந்தவை எல்லாம் குழப்பமாய்
தெரியாதது எல்லாம் தெளிவாய்
பொற்தாமரை இலைகள் மறைத்த
நீராய் என் காதல்
நெஞ்சம் முழுவதும் இருந்தாலும்
வாய்வழி வர மறுத்தபடி!!!
விழிகளால் மொழியும் காதால்
இதழ்களில் வருவது எப்போதோ?
காத்துருக்கிறேன்................,,,,,,,,,!!!
அன்புடன் நவீன் மென்மையானவன்