ஜகத்தினை வெல்லவே!!!

அகத்தையும்,புறத்தையும்
பேணி காத்து!!!
இழிவான செயற்புரியா
சரீரமும் அதில்
குடிக்கொண்ட ஆன்மாவும்!!!
பழிதனை செய்யாது
பாவத்தை சுமக்காது
பார் உலகை வெல்லுமே!!!
திட,திரவ
வாயு நிலைகளை
பகுத்து பிரித்து!!!
முன்னிலைகளிலும் முக்தி
நிலை எதுவென்று அறிந்து!!!
அடங்கா,தகா
ஆசைகளை அகற்றி
எந்நிலையிலும் மாசற்று,
மறந்தும் விரயம் செய்யாது!!!
விழி காக்கும்
இமை திரையென
போற்றி தனை காத்து!!!
வாழ்வின் வழி
நெடிலும் தடம் பதித்து!!!
வாழ்வதற்க்கு உதாரணமாய்
வாழ்ந்து ஜகத்தினை வெல்லுமே!!!!
அன்புடன் நவீன் மென்மையானவன்