திருக்குறள் கிறித்துவ நூல் - இல்லை

திருக்குறள் கிறிஸ்தவ நூல் - இல்லை !
+++
- யாதுமறியான் .
+++
முன்னுரை : தமிழின் தலைசிறந்த நூலான திருக்குறள் , உலகின் பொதுமறை எனப் போற்றப்படுகின்றது . இதன் உயரிய கருத்துகள் , பல்வேறு மதப் புத்தகங்களிலும் பரவலாக்க் காணப்படுகின்றன.

எனவே , ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் , திருவள்ளுவர் , தங்களுடைய மதத்தைச் சார்ந்தவர் என்றும் , திருக்குறள் தங்களுடைய மத நூல் என்றும் வாதிடுகின்றனர் .

இந்தத் தொடரில் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலா என்பது பற்றி ஆய்வு செய்வோம் .

சமீப காலங்களில் கிறித்துவ அறிஞர்கள் ,
திருக்குறளில் உள்ள சிற்சில வார்த்தைகளை மட்டும் எடுத்து, அதற்கான பொருளைத் திரித்தும் , வலிந்தும் பொருள் கொண்டு , திருக்குறள் ஒரு கிறித்துவ நூல் என்றும், திருவள்ளுவர் ஒரு கிறித்துவர் என்றும் நிறுவ முற்படுகின்றனர் . இந்த அடிப்படையில், பல்வேறு நூல்களையும் எழுதிக் குவித்து வருகின்றனர் .

இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடரில், திருக்குறளில் உள்ள தனிப்பட்ட வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பொருள் திணிப்பு செய்யாமல் ,
கோட்பாட்டளவில் திருக்குறளுக்கும் பைபிளுக்கும் , அல்லது திருவள்ளுவருக்கும் இயேசு கிறித்துவுக்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை ஆய்வு செய்வோம் .

முதலில் கொள்கை- கோட்பாட்டு அளவில், திருக்குறள் , இயேசு கிறித்து அல்லது பைபிளின் நிலைப்பாடுகளில் இருந்து எந்தெந்த வகையில் முரண்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்வோம் .

வாசகர்களிள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன் .
தொடரும் - 2

எழுதியவர் : -யாதுமறியான். (18-Jun-25, 7:22 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 5

மேலே