இளைஞனே இது அல்ல வாழ்க்கை

காலம் கடந்த சொர்க்கங்கள்,
ரவிக்கை போடாத
மாது மலர்கள்,

ஆண் பெண் இனம் அறியாத
ஆதாம் ஏவாள்,

வரவேற்கிறேன் நரகத்திற்கு,
உடலை மறைக்க வந்த
ஆடைகள்
உணர்வை தூண்டிவிட
மாறிவிட்டது,

பாவம் பாவைகள்,
அழைக்கிறது
நாகரீகம் என்ற நரகங்கள்,

வாழ்கை என்ற பயணத்தில்
கருமங்கள் பல இருந்தும்- ஏன் இளைங்கனே
கேவலமான காமம் தேடுகிறாய் ,

உயிரை உருவாக்க பிறந்த
இனிய உறவு - இன்று பல
உயிர்களின் கழுத்தை அறுக்கும்
இழிவு நாளாகி கொண்டிருக்கிறது,

சுதந்திரத்திற்காக எழுதிய பாரதியின்
கவிதை கருத்துக்கள் கூட எடுபடாது
இந்த மானம் கெட்ட
காம வெறியர்கள் முன்.

நண்பா
வாழ்க்கையின் ஒரு நீர்த்துளி
மட்டுமே கேடுகெட்ட காமம்,
இன்னும் இருக்கின்றன
இனிமையான
பல தேன் துளிகள்
தேடிச்செல் தேன் துளிகளை
மட்டுமே!!!!!!!



காதலிக்கிறேன் தமிழை

எழுதியவர் : Muthushree (9-May-13, 12:02 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே