இரு தலை கொல்லி

நித்தமும் உன் நினைப்புடன் நான்
உன் மீது நான் கொண்ட நேசமதை
எனக்கு உருவம் அளித்தவளிடம் கூறிய பொழுது
அவள் சாதியம் பேசினால்
எனக்காக தியாகம் செய்தவள்
விடும் கண்ணீரும் என்னால் தாங்க முடியவில்லை
எனக்காக எதையும் செய்யும் எத்தனிப்பவன்
என் இதழின் நடுக்கத்தின் அர்த்தம் தனை
ஆயிரம் மைல் அப்பால் இருந்து உணர்பவன்
அவனின் நேசத்தையும் துச்சம் என தூக்கி எரிய
முடியவில்லை
என் தாய்க்கும் தாயுமானவனுக்கும் மத்தியில்
இரு தலை கொள்ளியாய் நான்

எழுதியவர் : தர்ஷிகா (13-May-13, 1:24 pm)
Tanglish : iru thalai kolli
பார்வை : 228

மேலே