வினா வெளியில் ஓர் இரவு !
காதலோடும் காதலியோடும்
வருகிறேன் கடலே !
நின் சப்த சிணுங்களில்
சிணுங்கினாள் என் சிநேகிதி !
என் காதலி தீண்டலில்
நீ சப்தமற்று போனாய்
என் செவிகளில் !
புருவம் உயர்த்தி
நிலவை காட்டினாள் !
அவள் கால்விரல் பிடித்து
கூச்சம் கூட்டினேன் !
கன்னம் கிள்ளி
காதல் பேசினாள் !
அவள் கன்னம் முழுதும்
காதல் பதித்தேன் !
நீண்ட இரவொன்று அவள்
கண்களில் தெரிந்தது !
அவள் கண்கள் கொண்டே
என் உடலும் விடிந்தது !
இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்குது
மர்மமும் மாயையும்
இடைவெளி இல்லா அலை போல !
ஒரு போதும்
தீர்ந்து போவதில்லை
கடலும் காதலும் ........