வினா வெளியில் ஓர் இரவு !

காதலோடும் காதலியோடும்
வருகிறேன் கடலே !

நின் சப்த சிணுங்களில்
சிணுங்கினாள் என் சிநேகிதி !

என் காதலி தீண்டலில்
நீ சப்தமற்று போனாய்
என் செவிகளில் !

புருவம் உயர்த்தி
நிலவை காட்டினாள் !

அவள் கால்விரல் பிடித்து
கூச்சம் கூட்டினேன் !

கன்னம் கிள்ளி
காதல் பேசினாள் !

அவள் கன்னம் முழுதும்
காதல் பதித்தேன் !

நீண்ட இரவொன்று அவள்
கண்களில் தெரிந்தது !

அவள் கண்கள் கொண்டே
என் உடலும் விடிந்தது !

இப்படி நிகழ்ந்து கொண்டே இருக்குது
மர்மமும் மாயையும்
இடைவெளி இல்லா அலை போல !

ஒரு போதும்
தீர்ந்து போவதில்லை
கடலும் காதலும் ........

எழுதியவர் : (15-May-13, 11:41 am)
பார்வை : 70

மேலே