ஈழக்கொடி பறக்க
எல்லோரும்
கவிதை எழுதும்
பொருளானாய் !
தமிழ் மக்கள்
கண்ணீர்க் கடலால்
அஞ்சலி செலுத்தும்
மண்ணின் மகனானாய் !
உணர்வு விதைக்கும் தீயானாய் !
எதிரிகளைப் பார்த்து
உலகம் காரித்துப்ப உதவும்
கருவியானாய் !
மனிதர்கள் எனப்பட்டோரின்
மனச்சாட்சிகளை எல்லாம்
உலுக்கும் உன்னதமானாய் !
உலக மன்றத்தில்
ஈழக்கொடி பறக்க
வைக்கும் உந்துதலானாய் !
சிதறிக் கிடந்த
உணர்வுகளை
ஒன்றிணைக்கும் நூலானாய் !
என்றும் ஒன்றிணையா
ஆளும் கட்சியும்
எதிர்க்கட்சியும்
கைகளில் ஏந்தி
நியாயம் கேட்கும்
பதாகையானாய் !
உனையொத்த
மாணவர்களின்
உள்ளத்தை கொதிக்க
வைக்கும் தீப்பொறியானாய் !
வீரவணக்கம் ! வீரவணக்கம் !
தம்பியின் மகனே !
வீர வணக்கம் ! வீர வணக்கம் !
நம்பிக்கை இருக்கிறது மகனே!
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!
சுதந்திரத் தமிழ் ஈழத்
தேசிய கீதம் விரைவில்
ஒலிக்க இருக்கிறது !