நினைவுகளின் நிழல்கள்

அன்று..,
நீ நுழைந்தது தெரியாமல்..,
என் மனதை மூடிவிட்டேன்...
இன்று..,
நான் நீந்த தெரியாமல்..,
உன் நினைவில் மூழ்கிவிட்டேன்...

உன் நினைவு நீர்க்குளத்தில் இருந்து..,

நேற்றே வெளியேற முயற்சித்த, நான்...
இன்றோ... வெளியேறி மூச்சிழந்த, மீன்...

தோற்றே பெரும் வெற்றியான..,
உன் இனிய நினைவுகளை,
பெற்றுவிட்டேன் பெண்ணே... உன்னை,
பிரிந்துவிட்ட பின்னே...

எழுதியவர் : சாய நதி (31-May-13, 2:45 pm)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 150

மேலே