சகுனம்

தெருவில்

ஒரு கருப்பு பூனை

சின்ன எலி யை

பிடிக்க

தொரத்தி கொண்டு

ஓடியவாறு இருந்தது

இடையீல்

யாரோ ஒரு மனுஷன்

குறுக்க வர

"சே...சகுனம் சரி இல்லை

மனுஷன் குறுக்க

வந்துட்டான்" என்று அலுத்து கொண்டு

எலியை தொரதுவதை

விட்டு விட்டு ஓடியது

அந்த கருப்பு பூனை

என்ன செய்ய ?

பூனை கூட மனிதர்களை

பார்த்து கற்று கொண்டு

சகுனம் பார்கிறது

இன்று ...

??????

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (7-Jun-13, 8:42 am)
பார்வை : 95

மேலே