காதல் + எலி = காதலி (ஒடி விடும்)

என் வாழ்வில் ,
அவளை மலர் என்றேன்
சரி தான் !
வாடி உதிர்ந்து விட்டாள்.
அவளை கடல் அலை என்றேன்
சரி தான் !
வந்து சென்று விட்டாள்.
அவளை நிலவு என்றேன்
சரி தான் !
வந்து மறைந்து விட்டாள்.
அவளை மழை என்றேன்
சரி தான் !
வந்து நின்று விட்டாள்.
அவளை கானல் நீர் என்றேன்
சரி தான்
இருந்தால் இப்போது இல்லை
இவள் தான் காதலியா?