தயவு செய்து படிக்காதீர்

இது மரணத்தின் விளிம்பில்
நின்று தவிக்கும்
என் கலாச்சாரத்தின் சோக கதை

கணவனுக்கு வாழ்க்கை படுவதற்கு முன்
செல்போனுக்கு வாழ்க்கை படும்
எம் பெண்களின் கதை

சேலை சுருங்கி தாவணி ஆகி
தாவணி சுருங்கி துப்பட்டாவாகி
கடைசியில்
அதுவும் காற்றில் பரந்த கதை

ஆடையில் கண்ணியம் வளர்த்த
அழகு மிகு பூமியில்
டி ஷர்ட்டில் ஆபாச வசனத்துடன்
வீறு நடை போடும்
கலியுக பெண்கள் கதை

கை கூப்பி வணங்கிய
காலம் போய்
கைகுலுக்கும் நிலையும்
கரை கடந்து
இன்று கட்டி பிடிக்கும்
கலாச்சாரத்தின் பேரில்
கண்டவர்களை கட்டி பிடிக்கும்
கேடுகட்ட கதை

காதல் என்ற புனிதத்தின்
பெயரை சொல்லி
திரையரங்கையும் ,
பூங்காக்களையும்,
கடற்கரையையும்,
கெடுத்து

அதையும் கடந்து
சிலர் உல்லாச விடுதியிலும்
காதலை கேவலபடுத்தும்
கதை

காதலை விட வேகமாய்
கள்ள காதல் வளரும்
மானம் கெட்ட கதை

காதலிப்பதையும்
கழட்டி விடுவதையும்
வாடிக்கையாய் கொண்ட
மார்டன் பெண்களின்
மதி கெட்ட கதை

திருமணம் என்னும்
ஆயிரம் காலத்து பயிரை
விவாகரத்து என்னும்
திராவகம் ஊற்றி
பொசுக்கிய கதை

பெண் சுதந்திரம் வேண்டும்
என்று போராடியவர்கள் எல்லாம்
ஏன் கேட்டோம் இப்படியொரு
சுதந்திரம் என்று
நொந்து கொள்ளும் கதை

எஸ் எம் எஸ் வழியே
பேசி பேசி
வார்த்தைகளை தொலைத்த கதை

இத்தனை கதைகளை
சொல்வதால் நான் பெண்களுக்கு
எதிரானவன் அல்ல

பெண்களை தெய்வமாக
மதிப்பவன் என்பதாலேயே
தெய்வத்தின் தன்மைக்கு
களங்கம் வர கூடாதென்ற
கவலையுடன் மட்டுமே
இதை எழுதுகிறேன்

மீண்டும் ஒரு முறை

தயவு செய்து படிக்காதீர்

இது உங்களுக்கு பிடிக்காமலும்
போகலாம்

எழுதியவர் : ந.சத்யா (13-Jun-13, 1:17 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 184

மேலே