வாழ்க்கை புரிந்தது

அது ஒரு சிறிய செடி

எவர் உதவியுமின்றி
தானே வளரும்
தளிர்ச்செடி.

என் கவனக்குறைவால்
ஒரிரவு
கால்பட்டுக் குலைந்து போனது.

மறுநாள் காலையில்
குற்றவுணர்வு மொய்க்க
சென்று பார்த்தேன்.

முக்காலும் துவண்டிருந்தும்
புதிதாய் பூத்திருந்தது.

வாழ்க்கை புரிந்தது எனக்கு.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Jun-13, 3:11 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 94

மேலே