உனக்காக வாழ்ந்திருந்தேன்
பசியில் அழுகிறேன் கல்லிப்பாலாவது தருவாயா ?
மடியில் தூங்க ஏங்கினேன் முள் படுக்கைதான் எனக்கானதா ?
துணையாய் இருப்பாய் என்றிருந்தேன் என் துணையாய் கண்ணீர் மட்டுமே நீ தந்தாய்
உன்னோடு என் வாழ்கை என்றிருந்தேன் , நீயோ " உன்னை வைத்து தான் என் வழக்கை " என்றிருந்தாய்
உறவென்று நம்பினேன் என் உயிரையே எடுத்துவிட்டாய்.
இறந்தும் உன் முகம் காண துடிக்கிறேன் என் தூய்மையை போற்றும் மனிதனாய்.
உன் கைகள் ஏந்த வேண்டும் உன்னவளின் சடலத்தை !
அன்றாவது நம்புவாயா நான் உனக்காக வாழ்ந்தது உண்மையென்று !