சாதித்து என்னப்பயன் ???/
மஞ்சள் வெயில் –என்
நெஞ்சை குதூகலப்படுத்திய
மாலை வேளை .
எந்த கிளியிடமோ பச்சையை
கடன் வாங்கிய வயல்வெளி
என் இருபுறமும் ...
கற்பனை தோள் சாய்ந்து
கவியை எண்ணி நடை
அளந்து கொண்டிருந்த போது.....
என் தொலைதூரத்தில் ஒர்
கலவரத்தீ – காரணம்
காதல் பற்றி கொண்டதால்...
செய்தி என்னவென்றால் ..
இச்சாதி ஆணுக்கும்
அச்சாதி பெண்ணுக்கும்
காதலாம் !!?
கவிஞன் என்று தலை நிமிர்ந்த எனக்கு
மனிதன் என தலை குனிவைவிட
வேறுயென்ன இருக்கு....
சாதிகளை ஒழிக்காமல் நாம்
சாதித்து என்னப்பயன் ???/
-ரா.சந்தோஷ் குமார்