மெய்யாளும்மா ??

மெலிந்த இடையுடையாள் ,
மென்மை மனமுடையாள் ,
அன்னத்தின் நடையுடையாள்
அனிச்ச மலர் ,காம்புடன்
தலைவி தலையில்
சூடினாள்-
அவள் இடை
ஒடிந்து விட
சாவுப் பறை
ஒலித்தது ? !!!

அனிச்சப் பூக் கால் களையால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படா அ பறை (திருக்குறள் 1115)

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (15-Jul-13, 1:38 am)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே