முடிவில்லாப் பயணம்!!
யாரோ சென்ற
வழியில்
நானும் சென்றேன்
நேரம் அறியாமல் ,
தடுமாறித்தான் சென்றேன்
திசை அறியாமல் ,
தயக்கத்துடன் தான் சென்றேன்
தடம் விளங்காமல் ,
தடைகளை மீறி விடலாமா என்று
யோசனைகள் ஆயிரம் ,
அதில் ஆசைகள் நூறாயிரம் ,
நிறைவேறினால்
நினைவுகள் நிஜமாகும் ,
நிறைவேறாவிட்டால்
நிதர்சனமாகி நிற்பேன்
முடிவில்லாப் பயணத்தில்!!