திருத்தம்..!

வாழ்ற வாழ்கை
கொஞ்ச காலம்தான்,
அதில் வருத்தம் இல்லாம
வாழ்ந்து போகத்தான்
அவனவன் அடுத்தடுத்து
தப்பு செய்யுறன் - நல்லது
செய்ய விருப்பமில்லாம
பழகி போய்டான்..

வாழ்கைல அங்கங்க
வருந்தியாகணும்
அப்பப்ப திருந்தியாகணும்
வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான்
அதுவே வடுவா மாறிட்டா
நீ கொஞ்ச காலம்தான்..

படிச்சு முடிச்ச உடனே
வேல பாத்து வெச்ச
பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச
உயிர் குடுதவளுக்கு செஞ்சுபுட்ட
உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச

நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில்
நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே
தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே
தப்பு நடந்தா திருத்தி விடு..!

எழுதியவர் : (5-Dec-09, 12:24 pm)
பார்வை : 2881

மேலே