துயில்கொள் தோழி...

உண்மைகள் என்றும் தெய்வமும் இல்லை
பொய்கள் யாவுமே பாவமும் இல்லை
முழுமதி என்பதும் குறையுள்ள நிலவு
முகமூடி அணிந்து வாழவும் பழகு
எண்ணங்கள் சுகமாய் உள்ளவர் யாரோ
எண்ணியே ஏங்கி இறைவன் இறந்தானோ
உலகம் சிரிக்கும் நீ அழுதாலும் - நட்பே
உருகும் நீ மறந்து சென்றாலும்
உ றக்கம் ஒன்றே மருந்தென நீயும்
துயரம் மறந்து... துயில்கொள் தோழி...

எழுதியவர் : ராஜவேல் (27-Jul-13, 8:38 am)
சேர்த்தது : sprajavel
பார்வை : 200

மேலே