பொருந்தாத முகம்

நேரில் ஒரு வார்த்தை
மறைவில் ஒரு வார்த்தை -என்று
பேசிக்கொண்டு திரிவோர்க்கும் !

மனதில் ஒரு எண்ணம்
செயலில் ஒரு எண்ணம் -என்று
செய்துகொண்டு அலைவோர்க்கும் !

ஊருக்கு ஒரு வாழ்க்கை
தனக்கு ஒரு வாழ்க்கை -என்று
எண்ணிக்கொண்டு வாழ்வோர்க்கும் !

மனிதன் என்ற முகம்
அவர்களுக்கெல்லாம்
பொருந்தாத முகமே !!!

பாலாஜி

எழுதியவர் : balaji (3-Aug-13, 7:15 am)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 42

மேலே