தமிழிசை நாள்தோறும் பாடு

தமிழிசை நாள்தோறும் பாடு - இனி
நற்றமிழ் துறைதோறும் நாடு
இதுவன்றோ தமிழனின் வீடு - இதை
மறுப்போரை மறக்காமல் சாடு

......(தமிழிசை )

தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல்
மொழி இனிதாகும் இன்றே
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம்
வாழ்வினை வளமாக்கும் உறவு

....(தமிழிசை )

அம்மா என்றழைக்கும் மழலை - பின்
மம்மி என்றழைப்பது ஏனோ ?
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன்
தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ?

......(தமிழிசை )

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (14-Aug-13, 9:22 pm)
பார்வை : 167

மேலே