வேண்டும்……

அதிசயம்!
நான் காண வேண்டும்….
கருமை நிறத்தில்
மண்ணை தட்டும்
அருவியாய் சிகை வேண்டும்!

அதில்
காற்றோடு இடம் பெயரும்
மலரின் நறுமணம் வேண்டும்!

கண்ணோடு
கண் பேசிடும் மொழியினை
எனக்கு கற்றுத்தர
இரு விழிகள் வேண்டும்!

பூக்களில் படைத்த
கூறிய வாளினை போன்ற
நாசி வேண்டும்!

நீர் ஒட்டா
தாமரை இதழ் போன்ற
செவி மடல் வேண்டும்!

என் முகத்தினை
எனக்கே பிரதிபளித்திடும்
ஒரு ஊடகமாய்
இரு கண்ணகள் வேண்டும்!

பாளை வணக்களில்
படிந்து கிடக்கும்
மணல் சுவடுகலாய்
இதழ்கள் வேண்டும்!

என்னை மூச்சடைக்க வைக்கும்
ஆழ கேனியாய்
அழகிய
கழுத்தும் வேண்டும்!

என் இதழ் பாதிக்கும்
முத்த சுவடுகளை
சுமந்து செல்லும்
தென்றலாய்
இரு கரங்கள் வேண்டும்!

என் உய்ரோடு
உடலும் நலிவிட
ஓர் மெல்லிய இடை வேண்டும்!

நான்
அள்ளி அனைத்து
உறங்கிட
மல்லிகை கொடியாய்
பாதங்களும் வேண்டும்!

இவை அனைத்தும்
ஓர் மங்கை இடம்
உண்டாயின்
அம்மங்கஈனை
நான்
மனம் முடித்திட
ஓர் வரம் வேண்டும்!

அதை
அவளை
ஈன்றெடுத்த
இருவர் தர வேண்டும்……….

எழுதியவர் : மதியழகன். ம (25-Aug-13, 7:01 pm)
சேர்த்தது : Mathi Mani
பார்வை : 71

மேலே