புதுமனை புகுவிழா வாழ்த்து ...!!

அன்பெனும் கல் அடுக்கி
ஆசை எனும் கலவை பூசி
இன்பம் எனும் இல்லமாக்கி
ஈடில்லா நேசத்துடன்
உண்மை நெறி காத்து
ஊர்மெச்ச பேர் எடுத்து
எட்டுத்திக்கும் புகழ் பரப்பி
ஏற்றமிகு புதுமனைபுகுவிழாவில்
ஐந்து பூதங்களும் சேர்ந்து வாழ்த்த
ஒற்றுமையாய் பெருமை சேர்த்து
ஓசையின்றி சாதனை படைத்து
ஔவைமொழி கடைபிடித்து ஆனந்தமாய் வாழ்க !

முப்பெருந்தேவியர் கொலுவிருக்க
மும்மூர்த்திகள் அருள் மழை பொழிய
முப்பத்து முக்கோடி தேவர்களும்
முன்னின்று வாழ்த்துரைக்க
முயற்சிகள் யாவிலும் வெற்றிகள் குவித்து
முத்தமிழ்போல் நிறைவாக வாழ்க ...!! வளர்க ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Aug-13, 9:29 pm)
பார்வை : 50271

மேலே