கொடுத்ததெல்லாங் கொடுத்தான்...!

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சந் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

எழுதியவர் : கவிஞர் வாலி (3-Sep-13, 9:32 am)
பார்வை : 85

புதிய படைப்புகள்

மேலே